வரதட்சணை வழக்கு : "அடக்குமுறையை மேற்கொள்பவர்கள் கல்வியறிவு பெறவேண்டும்" - நீதிபதி அதிரடி!

பெண் குழந்தை பெற்றதற்காக மருமகள்களை குறைகூறி துன்புறுத்தும் கணவரின் பெற்றோர், முதலில் தங்கள் மகனின் குரோமோசோம்களே குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வரதட்சணை வழக்கு : "அடக்குமுறையை மேற்கொள்பவர்கள் கல்வியறிவு பெறவேண்டும்" - நீதிபதி அதிரடி!
வரதட்சணை வழக்கு : "அடக்குமுறையை மேற்கொள்பவர்கள் கல்வியறிவு பெறவேண்டும்" - நீதிபதி அதிரடி!twitter

வரதட்சணை வழக்கில் தண்டிக்கப்பட்ட கணவருக்கு ஜாமீன் கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்து தீர்பளித்தார் நீதிபதி.

தீர்ப்புடன் அவர் வழங்கிய அறிவுரை அனைவரையும் ஈர்த்துள்ளது.

அவர் கூறியதாவது:-

"பெண் குழந்தை பெற்றதற்காக மருமகள்களை குறைகூறி துன்புறுத்தும் கணவரின் பெற்றோர், முதலில் தங்கள் மகனின் குரோமோசோம்களே குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் கொண்டுவரும் வரதட்சணையை வைத்து அவரின் மதிப்பை தீர்மானிப்பது, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது.

இயற்கையாக பெண்ணின் உடலில் XX குரோமோசோம்களும், ஆணிடம் XY குரோமோசோம்களும் உள்ளன. பெண்ணிடம் உள்ள குரோமோசோம்களால் பெண் குழந்தைகள் பிறக்கின்றன.

ஆணிடம் உள்ள XY குரோமோசோம்களால் மட்டுமே ஆண் குழந்தையை உருவாக்க முடியும் என்ற கல்வியறிவை, ஆண் வாரிசு இல்லை எனக்கூறி அடக்குமுறைகளை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் பெற வேண்டும்."

வரதட்சணை வழக்கு : "அடக்குமுறையை மேற்கொள்பவர்கள் கல்வியறிவு பெறவேண்டும்" - நீதிபதி அதிரடி!
பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com