TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா தொடங்கிய இந்த நிறுவனம் எப்போதும் புதுமைகளுக்காக அறியப்பட்ட ஒன்றாக இருக்கிறது. டாடா இந்திய நிறுவனங்களில் முதன்மையானதாக இருப்பதனால் பல தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.
TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக  செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?
TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?Twitter

TATA நிறுவனம் இந்தியாவின் அங்கமாக இருந்துவருகிறது.

மிகப் பழமையான இந்திய நிறுவனமான டாடா 1868ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா தொடங்கிய இந்த நிறுவனம் எப்போதும் புதுமைகளுக்காக அறியப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

டாடா இந்திய நிறுவனங்களில் முதன்மையானதாக இருப்பதனால் பல தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தியாவின் முதல் வணிக விமான நிறுவனம்

டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் இந்தியாவின் முதல் வணிக விமான நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் தற்போதைய ஏர் இந்தியா.

ஜெஆர்டி டாடா 1932ல் இதனைத் தொடங்கினார். அரசுடைமை ஆக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக  செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?
Ratan Tata: மகிழ்ச்சியின் ரகசியத்தை பகிர்ந்த டாடா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட முதல் கார்

கார் தயாரிப்பில் ஹிந்துஸ்தான் அம்பாசிட்டர் தான் முதன் முதலாக களமிறங்கியது.

ஆனால் அந்த கார்கள் இங்கிலாந்து நிறுவனமான மோரிஸ் மோட்டர்ஸ் உடன் இணைந்து தான் தயாரித்து வந்தது.

அதன் பிறகு தயாரிக்கப்பட்ட பல கார்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தான் தயாரிக்கப்பட்டன.

முதன் முதலாக முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் டாடா இண்டிகா!

1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கார் ஜெனீவா கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா தான் முதன் முதலாக சொந்தமாக கார் வாங்கிய இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக  செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?
ரத்தன் டாடா டு அம்பானி : இந்திய பில்லியனர்களின் இளம் வயது புகைப்படங்கள் - Throwback pics

இந்தியாவின் முதல் மென்பொருள் ஆராய்ச்சி மையம்

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) நிறுவனம் இன்றளவும் மென்பொருள் துறையில் ஓங்கியிருக்கும் இந்திய நிறுவனம் என்பது நாம் அறிந்தது.

டாடா ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம் (TRDDC) உருவாவதில் டிசிஎஸ் முக்கிய பங்காற்றியது.

1980ல் TRDDC செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

TATA : 1868 முதல் இன்று வரை இந்தியாவுக்கு முன்னோடியாக  செய்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?
டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com