உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?

எது எப்படி இருந்தாலும் உனகோடிக்கு என சில சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. அதாவது, உனகோடியில் பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள், சிவன் தலை மற்றும் பிரம்மாண்டமான விநாயகர் உருவங்கள் உள்ளன.
உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?
உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?Twitter
Published on

இந்தியா பண்பாடு, கலாச்சாரம் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு பெயர் போனது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஏன்? ஒவ்வொரு ஊர்களிலும் வசிக்கும் மக்கள் கூட பல வகையான பாரம்பரியங்களை பின்பற்றி வருகின்றனர். இந்த பதிவிலும் ஒரு வித்தியாசமான கோவில் குறித்து தான் பார்க்க போகிறோம்.

திரிபுரா பகுதியின் ரகுநந்தன் மலைகளில் அமைந்துள்ள உனகோடி கோவில்கள் 99,99,999 கடவுள்கள் மற்றும் சிலைகளைக் கொண்டுள்ளன. உனகோடி என்பது பெங்காலியில் ஒரு கோடிக்கும் குறைவானதைக் குறிக்கிறது.

வடகிழக்கு அங்கோர் வாட் என்று அழைக்கப்படும் இந்த கோவில்களில் ஒரு கோடி கடவுள்களின் சிலைகள் உள்ளன.

இதற்கான வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிவன் காசிக்கு சென்றபோது 99,99,999 தெய்வங்களுடன் சென்றுள்ளார். பிரயாணத்தின் போது இரகுநந்தன் மலையில் தங்கிய அவர்கள் காலையில் எழுந்திருக்கவில்லையாம்.

இதனால் கோபம் அடைந்த சிவன் மற்ற தெய்வங்களுக்கு சாபம் கொடுத்ததாகவும், அதனால் அவர்கள் கல்லாக மாறியதாகவும் புராணங்கள் கூறுகிறது. ஆனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உனகோடி பற்றி வேறு ஒரு கதையை கூறுகின்றனர். அதாவது, பார்வதியின் பக்தர் கல்லு குமாரை கைலாசத்திற்கு அழைத்துச் செல்ல பார்வதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?
நேபாளம் : சுயம்புவாக தோன்றிய ஒரு புத்த கோவில் - ஏன் நிச்சயம் பார்வையிட வேண்டும்?

இதற்காக, கல்லு குமார் ஒரே இரவில் ஒரு கோடி சிவன் சிலைகளை உருவாக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் விடியற்காலையில் சிலைகள் ஒரு கோடிக்கும் குறைவாகவே இருந்ததால் அவரை உனகோடியில் உள்ள சிலைகளுடன் விட்டு சென்றிருக்கிறார் சிவன் என்று கூறுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் உனகோடிக்கு என சில சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. அதாவது, உனகோடியில் பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள், சிவன் தலை மற்றும் பிரம்மாண்டமான விநாயகர் உருவங்கள் உள்ளன.

அதே போல, உனகோடீஸ்வர கால பைரவா என்று அழைக்கப்படும் சிவன் உருவம் 10 அடி உயரமுள்ள எம்பிராய்டரி தலை, ஆடை உட்பட சுமார் 30 அடி உயரம் கொண்டுள்ளது. இந்த சிவனின் தலை அலங்காரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. தவிர காளையின் மூன்று பெரிய படங்கள் நிலத்தில் பாதி புதைந்த நிலையில் இருக்கும்.

உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?
பூமிக்கு கீழ் கட்டப்பட்ட இந்தியாவின் தலைகீழ் கோவில் - எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com