காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணி பேசியது என்ன?
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணி பேசியது என்ன?Twitter

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணி பேசியது என்ன?

மோடியின் தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு பெண்ணாக என்னால் அதை உணரமுடிகிறது. பெண்களுக்கு பாஜகவில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் விஜயதரணி. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்ற பின்பு விஜயதாரணிக்கு சட்டமன்ற தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை என்பது அவர் விலக மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பாஜகவில் சேர்ந்த விஜயதரணி பேசியது என்ன?

காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. பெண்கள் தலைமை பதவிகளுக்கு வர முடியவில்லை. சட்டமன்ற தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் எனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

1999 முதல் நான் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடந்த முறை இடைத்தேர்தலிலும் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த முறையும் மறுக்கப்படும் என்றே நினைக்கிறேன்.

கன்னியாக்குமரில் எந்த எம்.பியும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவில்லை. என்னைப்போன்றவர் மத்தியில் ஆளும் கட்சியுடன் இணையும்போது பல பணிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மீனவர்கள் பிரச்னைக்கு பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளது.

வட இந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு இருக்க காரணம் பாஜகவின் திட்டங்கள் சென்று சேர்ந்திருப்பதுதான். தமிழக கட்சிகள் பல திட்டங்களை புறக்கணித்து வருகின்றன. மத்தியரசு திட்டங்கள் தமிழக மக்களை சென்று சேராததற்கு மொழியும் ஒரு காரணமாக இருக்கிறது.

மோடியின் தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு பெண்ணாக என்னால் அதை உணரமுடிகிறது. பெண்களுக்கு பாஜகவில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. என் எல்லா பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். இனி பாஜக என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணி பேசியது என்ன?
சனாதனம் குறித்து இந்தியில் பதிவிட்ட பாஜக - அமைச்சர் உதயநிதியின் ரிப்ளை வைரல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com