Onam: கேரளாவின் பாரம்பரிய ’கசவு புடவை’ - ஓணத்தில் பெண்கள் இந்த புடவை அணிய என்ன காரணம்?

இதனை கசவு புடவை என்று அழைக்கின்றனர். கேரளா சாரி அல்லது ஓணம் சாரி என்றால் நமக்கு தெரியும். வெள்ளை அல்லது பழுப்பு நிற புடவையில், தங்க நிறத்திலான ஜரிகை பார்டருடன் இருக்கும் இந்த புடவை.
Onam: கேரளாவின் பாரம்பரிய ’கசவு புடவை’ - ஓணத்தில் பெண்கள் இந்த புடவை அணிய என்ன காரணம்?
Onam: கேரளாவின் பாரம்பரிய ’கசவு புடவை’ - ஓணத்தில் பெண்கள் இந்த புடவை அணிய என்ன காரணம்?twitter
Published on

கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய பண்டிகை ஓணம். அறுவடை திருவிழாவான இது 10 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது. ஓணம் தினத்தன்று அறுசுவை உணவு சமைத்து உற்றார் உறவினர் சூழ பண்டிகை கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகையின் போது, திருமணங்கள் அல்லது முக்கிய பண்டிகையின் போது கேரள பெண்கள் ஒரு குறிப்பிட்ட வகை புடவை அணிகின்றனர்.

(தற்போது அனைவருமே அணிகிறோம்)

இதனை கசவு புடவை என்று அழைக்கின்றனர். கேரளா சாரி அல்லது ஓணம் சாரி என்றால் நமக்கு தெரியும். வெள்ளை அல்லது பழுப்பு நிற புடவையில், தங்க நிறத்திலான ஜரிகை பார்டருடன் இருக்கும் இந்த புடவை.

இந்த கசவு புடவையை ஓணத்திற்கு பெண்கள் அணிய காரணம் என்ன?

கசவு

இந்த கேரளா புடவையை நாம் கசவு புடவை என்று அழைத்தாலும், நிஜத்தில் அதன் தங்க நிற ஜரிகையின் பெயர் தான் கசவு என்பது.

இந்த கசவு நூல்கள் சுத்த தங்கத்தினால் செய்யப்படுகிறது. அறுவடை திருவிழாவான ஓணத்தின்போது இதனை அணிவது செழிப்பு, வளர்ச்சி போன்றவற்றை எடுத்துகாட்ட இந்த தங்க நிறம் பயன்படுகிறது. தங்க நிறத்தில் இருக்கும் சூரியனின் கதிர்கள் கேரள நாட்டின் பரந்து விரிந்த நிலப்பரப்பை குறிக்கிறது.

தங்கத்தின் விலை கூட கூட, சேலை நெய்யும் கலைஞர்கள், தற்போது தங்கத்துடன் செப்பும் சேர்த்து நெய்கின்றனர்

மேலும் இந்த புடவையின் வெள்ளை நிறம் இயற்கையின் நிகரற்ற அழகை குறிப்பதாக உள்ளது.

வயது, சாதி, மதம் என எந்த வித வேறுபாடுமின்றி கேரள பெண்கள் இந்த கசவு புடவையை அணிகின்றனர். இது அவர்களின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தையும் காட்டுகிறது

Onam: கேரளாவின் பாரம்பரிய ’கசவு புடவை’ - ஓணத்தில் பெண்கள் இந்த புடவை அணிய என்ன காரணம்?
Kerala: Backwaters என்றால் என்ன? கேரளாவின் அழகிய உப்பங்கழிகள் இதோ!

கசவு புடவை தயாரிக்க எவ்வளவு நாள் ஆகும்?

பட்டு முதல் பருத்தி வரை இந்த புடவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எளிமையான டிசைன்கள் கொண்ட புடவை தயாரிக்க மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகிறது.

இதிலேயே விதவிதமான கலைகளுடன் நெய்யவேண்டும் என்றால் நேரம் அதிகரிக்கும். நுணுக்கமான டிசைன்களுடைய புடவைகளை பெரும்பாலும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பெண்கள் அணிகின்றனர். இவற்றை தயாரிக்க குறைந்தது ஒரு மாதக் காலம் எடுக்கிறது.

இதற்கேற்றார் போல புடவையின் விலையும் மாறுபடுகிறது.

Onam: கேரளாவின் பாரம்பரிய ’கசவு புடவை’ - ஓணத்தில் பெண்கள் இந்த புடவை அணிய என்ன காரணம்?
Kerala : தனியாக பயணிக்கும் பெண்களுக்காக APP அறிமுகப்படுத்தும் கேரளா - என்னென்ன வசதிகள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com