Independence Day 2023 : சுதந்திர தினத்தில் ஏன் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றுகிறார்?

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ஏன் பிரதமர் தேசிய கொடியை ஏற்றுகிறார்?
Independence Day 2023 : சுதந்திர தினத்தில் ஏன் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றுகிறார்?
Independence Day 2023 : சுதந்திர தினத்தில் ஏன் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றுகிறார்?twitter

நாளை இந்தியா 77வது சுதந்திர தினத்தை அனுசரிக்கிறது. இதனையொட்டி தலைநகரான டெல்லியில் இருக்கும் செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றுவார்.

ஆண்டுதோறும், இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு என்ன காரணம்? ஏன் ஜனாதிபதியோ மற்ற மத்திய அமைச்சர்களோ கொடியேற்றுவதில்லை?

இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

நேரு தொடங்கிவைத்த வழக்கம்

1947, ஆகஸ்ட் 15 இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போது அந்த தருணத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்தியாவின் தேசிய கொடியை செங்கோட்டையின் லஹோரி வாயிலில் ஏற்றினார்.

1857ல் முகலாய அரசர் பகதூர் ஷாவிடம் இருந்து செங்கோட்டையை கைப்பற்றியது ஆங்கிலேய அரசு. அது வரை கிழக்கிந்திய கம்பனி மூலம் இந்தியாவை ஆண்டு வந்தனர் பிரிட்டிஷர்கள்.

மேலும் 1857ஆம் ஆண்டு இந்தியர்கள் பலரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தினர். இதற்கு முக்கிய காரணியாக அரசர் பகதூர் ஷா விளங்கினார்

Independence Day 2023 : சுதந்திர தினத்தில் ஏன் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றுகிறார்?
Independence Day : ரஜினிகாந்த் டு தனுஷ் - சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னத்தில் ஜவஹர்லால் நேரு கொடியேற்றினார். இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதன்முதலில் ஏற்றப்பட்டது.

முதலில் ஜனவரி 26 ஆம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக அறிவித்தாலும், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே!

ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கி செங்கோட்டையில் கொடியேற்றியதன் மூலம் அந்த வழக்கமே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியா சுதந்திரம் பெற தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொடியேற்றம் நிகழ்த்தப்படுகிறது

Independence Day 2023 : சுதந்திர தினத்தில் ஏன் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றுகிறார்?
76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com