மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை?" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?

பிரதமர் மோடியின் மொத்த உரையில் அவர் நேரு குடும்பத்தினர் ஏன் அவர் பெயரைப் பின்னால் சேர்த்துக்கொள்ளவில்லை எனக் கேட்டு சிரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?
மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?twitter
Published on

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கிப் பேசிய பிரதமர் மோடி, நேருவுக்கு பிறகு ஏன் அவரது பிள்ளைகள் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

"சிலர் நாட்டில் வகுக்கப்படும் திட்டங்களுக்கு சமஸ்கிருத பெயர்களை வைப்பது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். நான் ஒரு அறிக்கையில் படித்தேன் நாட்டில் 600க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நேரு மற்றும் காந்தியின் குடும்ப பெயரை வைத்துள்ளனர்." என அவர் பேசினார்.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சி சட்ட திருத்தம் 356-ஐ பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாக விமர்சித்தார்.

"காங்கிரஸ் 90 முறை ஆர்டிகள் 356-ஐ பயன்படுத்தி ஆட்சிகளைக் கலைத்துள்ளது. ஒரே ஒரு பிரதமர் மட்டும் 50 முறை ஆட்சிகளைக் கலைத்துள்ளார். அவர் பெயர் இந்திரா காந்தி. கேரளாவில் கம்யூனிச ஆட்சி அமைந்த போது பண்டிதர் நேரு அதனைக் கலைத்தார்" என மோடி பேசினார்.

மோடி பேசும் போது எதிர்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

பிரதமர் மோடியின் மொத்த உரையில் அவர் நேரு குடும்பத்தினர் ஏன் அவர் பெயரைப் பின்னால் சேர்த்துக்கொள்ளவில்லை எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வறிஞருமான ராஜன் குறை கிருஷ்ணன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமரின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.

மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்

அவரது பதிவில், "ஒரு நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்தில் இப்படியெல்லாமா காமெடியாக பேசுவார்?

ஏன் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பம் நேரு பெயரை வைத்துக்கொள்வதில்லை என்று கேட்டு அவரே சிரிக்கிறார். இதை அவர் காமெடி என்று நினைப்பதுதான் காமெடி.

இந்திரா நேரு ஃபிரோஸ் காந்தி என்பவரை மணந்ததால் கணவரின் குடும்பப் பெயரை சேர்த்துக்கொண்டதால் இந்திரா காந்தி என அறியப்படலானார்.

மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?
பிரதமர் மோடி : மக்கள் நம்பிக்கைதான் என்னுடைய பாதுகாப்பு கேடயம்

ஃபிரோஸ் காந்தியின் பிள்ளைகள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று அழைக்கப் பட்டார்கள். அவர்கள் மனைவிகள் சோனியா காந்தி, மேனகா காந்தி என்று அழைக்கப்பட்டார்கள்.

ராஜீவ் காந்தியின் பிள்ளை ராகுல் காந்தி. சஞ்சய் காந்தியின் பிள்ளை வருண் காந்தி. ராஜீவ் மகள் ராபர்ட் வதேராவை மணந்தார். அதனால் தன்னை பிரியங்கா காந்தி வதேரா என்று கூறிக்கொள்கிறார்.

இதில் என்ன குழப்பம்? ஏன் அவர்கள் நேரு என்று பெயர் வைத்துக்கொள்ள வேண்டும்?

உங்கள் நண்பர் அதானி ஏன் ஏமாற்று வேலை செய்கிறார் என்று கேட்டால் பிரதமர் என்ன பேசுகிறார் என்று பாருங்கள். நல்ல நாடாளுமன்ற ஜனநாயகம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?
திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை - ஒரு அடடே சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com