காதலரை கொலை செய்த கணவர், துக்கம் தாங்காமல் 40 வயது பெண் தற்கொலை - நடந்தது என்ன?

ராஜஸ்தானில், தன் காதலன் இறந்த துக்கம் தாளாமல், 40-வயது பெண் ஒருவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், அந்த பெண்ணின் கணவர், தன் மனைவியின் காதலனை கொன்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Suicide
SuicideTwitter
Published on

கடந்த திங்கள்கிழமை அன்று, ராஜஸ்தானின் பிகானெர் மாவட்டத்தில், 40 வயது பெண் ஒருவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரேதத்தை கைபற்றி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை செய்ததில், அப்பெண், தன் காதலன் இறந்த சோகம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியது.

Suicide
Suicide Twitter

விசாரணை தொடர்ந்ததில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, அந்த பெண், தன் கணவரின் உறவினருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். விஷயம் தெரிந்துகொண்ட கணவன், கடந்த ஞாயிறு அன்று அவனை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த அந்த பெண், தன் காதலன் இறந்து போனதால் துக்கம் தாளாமல், ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இறந்த பெண்ணின் உடலைக் கைபற்றி, பிபிஎம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலைக் குற்றத்திற்காக அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Suicide
உத்தர பிரதேசம்: கைத்துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியர் கைது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com