
ஆப்பிள் நிறுவனம் விரைவில் மெஸ்ஸேஜ்களை அனுப்புபவரின் குரலிலேயே படிக்கும் தொழில்நுட்பத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த புதிய தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை ஆப்பிள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆப்பிள் இன்ஸைடர் என்ற தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மெஸ்ஸேஜ் அனுப்புபவரின் பழைய வாய்ஸ் ரெக்கார்டின் மாதிரியை வைத்து அனைத்து வார்த்தைகளை அவரைப் போலவே இந்த தொழில்நுட்பம் உச்சரிக்குமாம்.
மெஸ்ஸேஜ்களைப் பெறுபவர்களுக்கு வாய்ஸ், டெக்ஸ்ட் என இரண்டு மெஸ்ஸேஜும் வந்து சேரும் விரும்பிய ஒன்றை அவர் தேர்ந்தெடுத்து படிக்கலாம், அல்லது கேட்கலாம்.
இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மெஸ்ஸேஜ்களை எலெக்ட்ரானிக் குரலில் பேச வைக்கலாம்.
அனுப்புபவரின் குரலிலேயே படிக்க வைப்பது புதிதாக இருந்தாலும் இது போன்ற தொழில்நுட்பம் ஏற்கெனவே வந்திருக்கிறது.
அடோப் வோகோ என்ற மென்பொருள் மூலம் ஒருவர் எப்போதும் பேசாத ஒன்றை அவரது குரலின் மாதிரியை வைத்து ஒலிக்க வைக்க முடியும். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மென்பொருள் தடை செய்யப்பட்டது.
இப்போது அதேப் போன்ற தொழில்நுட்பத்துக்கு கப்புரிமை பதிவு செய்கிறது ஆப்பிள்.
கியோங் ஹி, ஜியாங்சுவான் லி மற்றும் டேவிட் ஏ வினர்ஸ்கி ஆகியோர் காப்புரிமையின் கண்டுபிடிப்பாளர்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்களில் வினர்ஸ்கி ஆப்பிளின் எழுத்துக்களை பேச்சாக மாற்றும் தொழில்நுட்பத்தின் இயக்குநர், லி சிரி மென்பொருளில் மூத்த பொறியளராக பணியாற்றியவர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust