செவ்வாயில் இருந்த உயிரை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?

1970களில் நாசா செவ்வாயின் மண்ணில் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட சோதனை அங்கிருந்த உயிரை அழித்திருக்கும் என்கிறார் விஞ்ஞானி டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch).
செவ்வாயில் இருந்த உயிரினத்தை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?
செவ்வாயில் இருந்த உயிரினத்தை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?Twitter
Published on

50 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் ஏலியன் இருந்ததாகவும், நாசா அதனை எதிர்பாராத விதமாக அழித்துவிட்டதாகவும் அறிவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch) என்பது அவர் பெயர். பெர்லினில் உள்ள டெக்னிகல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த அவர், 1970களில் நாசா செவ்வாயின் மண்ணில் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட சோதனை அங்கிருந்த உயிரை அழித்திருக்கும் என்கிறார்.

1970ம் ஆண்டு வைக்கிங் என்ற விண்வெளித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய் கிரகம் சென்ற நாசாவின் லேண்டர்கள் 3 உயிரியல் பரிசோதனைகளை மேற்கொண்டன.

செவ்வாய் கிரக மண்ணில் ஊட்டச்சத்து கரைசலைக் கலந்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகும் அளவை அளவிட்டு நுண்ணுயிர் இருப்பதை கண்டறிவது ஒரு முக்கிய சோதனையாக கருதப்பட்டது.

ஊட்டச்சத்து கரைசலை நுண்ணுயிர்கள் உட்கொண்டால் கதிரியக்க கார்பன்களை வெளியிடும். அதைக் கொண்டு நுண்ணுயிரிகளின் இருப்பை அறியலாம் என்பது திட்டம்.

இந்த நீர் மிகவும் திரவமாக இருந்திருக்கலாம் என்கிறார் மகுச். அப்படி திரவமாக இருந்தால் அங்குள்ள உயிரும் அழிந்திருக்கும்.

டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch)
டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch)

ஆனால் நாசாவின் வைக்கிங் 1 வைக்கிங் 2 லேண்டர்கள் பாசிடிவான முடிவுகளையே வழங்கின. சோதனையில், செவ்வாய்யின் மண் மாதிரியிலிருந்து 14CO2 மூலக்கூறு வெளியானதாக கூறுகின்றன.

நாசாவின் இந்த முடிவும் விவாதத்துக்கு உட்பட்டதே. சில அறிவியலாளர்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் கரிம சேர்மங்களின் ஆக்சிஜனேற்றம் காரணமாக 14CO2 மூலக்கூறு வெளியாகியிருக்கலாம் என்கின்றனர்.

முகுச், வைக்கிங் திட்டம் நிறைவேற்றப்பட்ட 1970களின் விஞ்ஞானிகளுக்கு செவ்வாயின் சுற்றுசூழல் குறித்து குறைவான புரிதலே இருந்தது என்கிறார்.

செவ்வாயில் இருந்த உயிரினத்தை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?
ஏலியன் : 32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தெளிவான UFO புகைப்படம் - உடையுமா மர்மங்கள்?

"பூமி நீர் கிரகமாக இருப்பதால், தண்ணீரை சேர்த்து உயிர் இருப்பதை அறிவது நல்ல விஷயம் தான். ஆனால் சிலி போன்ற உலகின் வெப்பமான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் போது உயிர்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன." என்கிறார்.

செவ்வாயில் இருந்த உயிரினத்தை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?
சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?

முகுச், செவ்வாயில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

செவ்வாயில் உயிர்கள் வாழ வாய்ப்பிருக்கும் தெற்கு ஹைலேண்ட்ஸ் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

செவ்வாயில் இருந்த உயிரினத்தை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?
Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com