சவுதி அரேபியா : காதலியுடன் லிவ்-இன் உறவில் வாழும் ரொனால்டோ - சட்டத்தை மீறியதற்கு தண்டனையா?

சவுதி அரோபியாவின் சட்டப்படி லிவ்-இன் உறவில் இணைந்து வாழ்வது குற்றமாகும். ஆனால் கால்பந்து உலகின் லெஜண்டை சவுதி அரேபியா தண்டிக்காது என்பதே அந்த நாட்டு வழக்கறிஞர்களின் எதிர்பார்பாகவும் இருக்கிறது.
சவுதி அரேபியா : காதலியுடன் லிவ்-இன் உறவில் வாழும் ரொனால்டோ - தண்டனை கொடுக்குமா அரசு?
சவுதி அரேபியா : காதலியுடன் லிவ்-இன் உறவில் வாழும் ரொனால்டோ - தண்டனை கொடுக்குமா அரசு?Twitter

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சில நாட்களுக்கு முன்னர் இவரது பழைய க்ளப்பான மான்செஸ்டர் யுனைட்டெட் உடன் பிரச்னை ஏற்பட்டதால் சவுதி அரேபியாவின் அல் நாசர் க்ளபில் இணைந்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை சவுதியில் இறங்கிய ரொனால்டோ தனது அணியின் சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சவுதி அரேபியாவில் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது தவிர ரொனால்டோவுக்கு இரட்டையர் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சவுதி அரோபியாவின் சட்டப்படி லிவ்-இன் உறவில் இணைந்து வாழ்வது குற்றமாகும்.

இதனால் அந்த நாட்டில் ரொனால்டோவுக்கு தண்டனை கிடைக்குமா அல்லது அந்த நாட்டு அரசு சட்டத்தை தளர்த்திக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் கால்பந்து உலகின் லெஜண்டை சவுதி அரேபியா தண்டிக்காது என்பதே அந்த நாட்டு வழக்கறிஞர்களின் எதிர்பார்பாகவும் இருக்கிறது.

இந்தியன் எஸ்பிரஸ் வலைத்தளம் இரண்டு சவுதி அரேபியா வழக்கறிஞர்களின் கூற்றை மேற்கோள் காட்டுகிறது.

"திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வது தடை செய்யப்பட்டிருந்தாலும் அதிகாரிகள் தாமாக யாரையும் சீண்டுவதில்லை. பிரச்னைகள் அல்லது குற்றங்கள் நிகழ்ந்தாலே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது" என்கிறார் ஒருவர்.

சவுதி அரேபியா : காதலியுடன் லிவ்-இன் உறவில் வாழும் ரொனால்டோ - தண்டனை கொடுக்குமா அரசு?
Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?

"சவுதி அரேபியாவின் சட்டம் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதைத் தடை செய்தாலும் வெளிநாட்டவர்களின் இந்த விஷயத்தில் சவுதி அரேபிய அரசு தலையிடாது" என மற்றொருவர் கூறியுள்ளார்.

இதனால் ரொனால்டோவும் அவரது காதலியும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட மாட்டார்கள்.

அல்-நாசர் க்ளப்பின் அடுத்த போட்டி 14, ஜனவரி 2023ல் நடைபெறுகிறது.

ஆனால் ரொனால்டோ அதில் பங்கேற்க முடியாது. கடந்த ஏப்ரல் 2022ல் செய்த தவறுக்காக அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ : ரசிகரின் மொபைலை தட்டிவிட்டத்துக்கு 50 லட்சம் அபராதம், விளையாட தடை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com