CSK vs MI : "ரஹானே மகிழ்ச்சியாக இல்லை" வெற்றி குறித்து தோனி என்ன பேசினார்?

"மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடும் படியும், ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நாங்கள் பின்னால் இருக்கிறோம் என்றும் ரஹானேவிடம் கூறினேன்"
CSK vs MI : "ரஹானே மகிழ்ச்சியாக இல்லை" வெற்றி குறித்து தோனி என்ன பேசினார்?
CSK vs MI : "ரஹானே மகிழ்ச்சியாக இல்லை" வெற்றி குறித்து தோனி என்ன பேசினார்?Twitter
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. தோனியின் அணி மும்பையின் இளைஞர் பட்டாளத்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கிய அஜன்கியா ரஹானே 19 ரன்களுக்கு 50 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த சீசனின் விரைவான அரைசதமாகவும் அது இருந்திருக்கிறது.

நேற்றைய போட்டி குறித்து மகிழ்ச்சியாக கேப்டன் தோனி பேசியிருக்கிறார். அதில் ரஹானேவுடன் அவர் பேசிய விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

"நானும் ரஹானேவுன் இந்த சீசனின் தொடக்கத்தில் பேசிக்கொண்டோம். நான் அவரிடம் அவரது பலத்தை பயன்படுத்தி விளையாடுமாறும் மைதானத்தை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் படியும் கூறினேன். மேலும் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடும் படியும், ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நாங்கள் பின்னால் இருக்கிறோம் என்றும் கூறினேன்" என்றார்.

மேலும் தோனி, "அவர் நன்றாக விளையாடினார். ஆனால் அவர் அவுட்டான விதம் குறித்து மகிழ்ச்சியாக இல்லை" என்றார்.

நேற்றைய போட்டியில் 27 பந்துகளுக்கு 61 ரன்கள் அடித்திருந்தார் ரஹானே. பியூஷ் சாவ்லா சுழற்பந்தில் பந்தை வெளியில் அடிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் அடித்த ஷாட் சூரிய குமாரிக் கைகளில் கேட்சாக விழுந்தது.

நேற்று முதல் ஓவரிலேயே சி.எஸ்.கே பந்துவீச்சாளர் தீபக் சஹருக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியை 157 ரன்களில் சுருட்டினர்.

CSK vs MI : "ரஹானே மகிழ்ச்சியாக இல்லை" வெற்றி குறித்து தோனி என்ன பேசினார்?
CSK vs MI: சென்னை, மும்பை போட்டியை ஐபிஎல்லின் El Clasico எனக் குறிப்பிடுவது ஏன்?

இதுகுறித்து தோனி, "இது நன்றாகத்தான் இருந்தது. நாங்கள் முதல் ஓவரில் தீபக் சஹரை இழந்தோம். மகலாவுக்கு இது முதல் போட்டி. பந்துவீச்சாளர்களை மாற்றுவது சிரமமாக இருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்" என்றார்.

மேலும் பௌலர்களான மகலா, ப்ரெடோரியஸ் நன்றாக விளையாடியதாகவும் தோனி பாராட்டினார்.

மேலும் கடந்த போட்டிகளில் அதிக நோபால்கள் வீசிய துஷார் தேஷ்பாண்டே இப்போது கட்டுப்படுத்தியிருப்பதாகவும், அவர் ரோஹித் சர்மாவை சிறப்பாக வீழ்த்தியதாகவும் தோனி பாராட்டினார்.

CSK vs MI : "ரஹானே மகிழ்ச்சியாக இல்லை" வெற்றி குறித்து தோனி என்ன பேசினார்?
தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustி

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com