Ind vs SA: "சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!" தட்டு தடுமாறி தொடரை கைபற்றியது இந்திய அணி

இந்திய பவுலர்களின் சொதப்பலை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட மில்லர் ஒற்றை ஆளாக விளையாடி 106 ரன்களை குவித்தார். கடைசி வரை அவரையும் டிகாக்கையும் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.
David Miller
David MillerTwitter
Published on

நேற்று நடைபெற்ற இந்தியா ஆப்ரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை கைபற்றியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். 43 ரன்கள் எடுத்து ரோஹித் வெளியேற, பின்னர் ராகுல் கோலி இணைந்தனர். 55 ரன்களுக்கு ராகுலும் ஆட்டமிழக்க, வழக்கம்போல சூர்யகுமார் யாதவின் கைகளுக்கு வந்தது ஆட்டம்.

துவக்கத்திலிருந்தே பவுண்டரிகள் மட்டுமே விளாசிய சூர்யகுமார் யாதவ் தென் ஆப்ரிக்க பவுலர்களுக்கு டஃப் கொடுத்தார் என்றால் மிகையல்ல.

சூர்யகுமார் யாதவ் 61 ரன் எடுத்து ரன் அவுட் ஆன பின், பொறுப்பை ஏற்றுக்கொண்டனர் கோலி - தினேஷ் கார்த்திக் இணை. கடைசி ஓவரில் சிக்சர், ஃபோர் என பந்தை பறக்கவிட்டார் தினேஷ் கார்த்திக். 20 ஓவர் முடிவில் 237 ரன்கள் எடுத்திருந்தனர் இந்திய வீரர்கள்.

David Miller
Ind vs Aus : ஃபினிஷராக நிரூபித்த டிகே; ரோஹித்தின் அதிரடி - தொடரை சமன் செய்தது எப்படி?

238 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்காவிற்கு துவக்க வீரர்கள் கைக்கொடுக்கவில்லை. இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே இருவர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். பின்னர் இணைந்த டிகாக்- மார்க்ரம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை நிலைப்படுத்தினர். 33 ரன்களுக்கு மார்க்ரம் வெளியேற, டேவிட் மில்லர் வந்தார்.

இவரது அதிரடியான ஆட்டம், வெற்றியை தென் ஆப்ரிக்காவின் பக்கம் திருப்பியது. "டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா" என்பது போல ஆகிவிட்டது இந்திய பவுலர்களின் நிலை. சற்றும் தோய்வடையாமல், இந்திய பவுலர்களின் சொதப்பலை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட மில்லர் ஒற்றை ஆளாக விளையாடி 106 ரன்களை குவித்தார். கடைசி வரை அவரையும் டிகாக்கையும் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.

தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் அடித்திருந்த அந்த 17 ரன்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது.

தட்டு தடுமாறி வெற்றிப்பெற்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை கைபற்றியுள்ளது. இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது பாம்பு ஒன்று மைதானத்தில் புகுந்து ஆட்டத்தை தடைசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது

David Miller
Ind Vs SA: மின்னல் வேகத்தில் பாய்ந்த இந்திய பவுலர்கள்- சுருண்ட தென் ஆப்ரிக்கா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com