MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனி

ஒவ்வொரு போட்டியிலும், பதிரனாவுக்கு அட்வைஸ் கொடுப்பதும், தோள் மீது கைப்போட்டு சிரித்து பேசுவதுமாய், அந்த இளைஞர் மீது கொஞ்சம் ஸ்பெஷலான கவனத்தையே தோனி காண்பித்து வருகிறார்.
MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனி
MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனிட்விட்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை சந்தித்துள்ளனர் பந்துவீச்சாளர் பதிரனாவின் குடும்பத்தினர்.

அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமின் பக்கத்தில் பதிரனாவின் சகோதரி விஷுகா பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படங்களும் அவர் பதிவிட்டிருந்த கேப்ஷனும் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடிக் கொண்டிருக்கிறார் மதீஷா பதிரனா. இலங்கை அணியை சேர்ந்த இந்த 21 வயது இளைஞர், அவரது அபாரமான பந்துவீச்சால் இந்த சீசனில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு போட்டியிலும், பதிரனாவுக்கு அட்வைஸ் கொடுப்பதும், தோள் மீது கைப்போட்டு சிரித்து பேசுவதுமாய், அந்த இளைஞர் மீது கொஞ்சம் ஸ்பெஷலான கவனத்தையே தோனி காண்பித்து வருகிறார்.

MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனி
தோனி போட்ட கண்டிஷன்: ஜடேஜாவை தக்கவைத்த சிஎஸ்கே - டிவிட்டர் பதிவு வைரல்

இவ்வளவு ஏன் இரு தினங்களுக்கு முன் குஜராத் அணியுடன் சென்னை அணி முதல் தகுதிச் சுற்றில் மோதியது. அப்போது பதிரனா 8 நிமிடங்களுக்கும் மேல், மைதானத்தை விட்டு வெளியில் இருந்தார். இதனால் நடுவர்கள் அவரை பந்துவீச அனுமதிக்கவில்லை. 9 நிமிடம் கழித்தே பந்துவீச முடியும் எனக் கூறினர்.

இதனை தொடர்ந்து மாற்று பௌலரை தேர்ந்தெடுக்காமல், 9 நிமிடங்களையும் நடுவரிடம் பேசிய கழித்தார் தோனி.

பதிரனாவோ, தவறு செய்து டீச்சரிடம் மாட்டிக்கொண்ட ச்கூல் பையன் போல அருகில் நின்றிருந்தார்.

MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனி
CSK: 10வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்- என்ன பேசினார் கேப்டன் தோனி?

இந்நிலையில் பதிரனாவின் சகோதரி நேற்று தன் இன்ஸ்டாவில் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த போஸ்ட்டின் கேப்ஷனில்,

“நீங்கள் மதீஷாவை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம், அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார் என்று தல சொன்னபோதே, மல்லி பாதுகாப்பான கரங்களில் இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. நான் நினைத்துபார்த்ததை விட இந்த தருணங்கள் மிகச் சிறப்பனவையாக இருந்தன” என்று பதிவிட்டிருந்தார்.

பதிரனா மற்றும் அவரது குடும்பத்தினர் தோனியுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனி
Pathirana: தோனி பாராட்டும் இந்த இளைஞர் யார்? இவரை ‘Baby Malinga’ என்றழைப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com