அர்ஜுனா விருது பெற்றுக்கொண்டார் முகமது ஷமி!

2023ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை இன்று வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
அர்ஜுனா விருது பெற்றுக்கொண்டார் முகமது ஷமி!
அர்ஜுனா விருது பெற்றுக்கொண்டார் முகமது ஷமி!Twitter

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற்றுக்கொண்டார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி.

முகமது ஷமி கடந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க இருக்கிறார்.

ஷமியுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கும் அர்ஜுனா விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிட்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் பெற்றுக்கொண்டனர்.

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அர்ஜுனா விருது பெற்றுக்கொண்டார் முகமது ஷமி!
கங்கை நதியில் வீசி எறியப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள்- முகமது அலி வழியில் மல்யுத்த வீரர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com