Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?

இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சூர்யகுமார் யாதவ் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியும்.
Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?
Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?Twitter
Published on

இந்திய அணியின் நட்சத்திர பேட்டரான சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இடையிலான நேற்றைய போட்டியில் மிகவும் முக்கியமான கட்டத்தில் களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் இந்த போட்டியில் அவரிடம் இருந்து நல்ல இன்னிங்ஸை எதிர்பார்த்தனர்.

ஆனால் ஏமாற்றமளிக்கும் விதமாக முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனால் ஸ்கை.

ஐபிஎல்லுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மூன்று டக் அவுட் ஆனால் சூர்யகுமார் யாதவ்.

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. மூன்றிலும் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளை எதிர்கொண்டார்.

ஆனால் அடித்ததோ 16 ரன்கள் மட்டுமே. இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 15 ரன்கள் அடித்துள்ளார். இவரது சராசரி 5.3 ஆக இருக்கிறது.

பேட்டிங் மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் சொதப்பியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். நேற்றையப் போட்டியில் அவர் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார்.

Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?
RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோ

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரவீரர் இப்படி சொதப்புவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கவலைக்குரியதாக உள்ளது.

மேலும் இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சூர்யகுமார் யாதவ் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியும்.

Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?
CSK : ஜடேஜா பிடித்த 'அந்த கேட்ச்' - வைரலாகும் தோனியின் 10 ஆண்டுகள் பழைய ட்வீட்

இந்த நெருக்கடியைப் புரிந்துக்கொண்டு கம்பேக் கொடுப்பாரா சூர்யகுமார் யாதவ் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இது குறித்து முன்னாள் பயிற்ச்சியாளரான ரவிசாஸ்திரி, "சூர்யகுமார் யாதவ் அவசரப்படாமல் தனது ஷாட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சில பந்துகளை வீணாக்கினாலும் பரவாயில்லை. அவருக்கு தேவையானதாக இருப்பது ஒரே ஒரு பிரமாதமான ஷாட். அது கைகூடிவிட்டால் அவர் மீண்டும் பிரகாசிப்பார்" எனக் கூறியுள்ளார்.

Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?
Rinku Singh: துப்புரவு தொழிலாளியாக இருந்த இவர் IPL ஹீரோவானது எப்படி? - நெகிழவைக்கும் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com