”விளையாட்டுக்கு மரியாதை கொடு” முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் - சச்சின் தந்த அட்வைஸ்!

தந்தை விளையாடிய அதே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் விளையாடவுள்ளார் என்கிற செய்தி வெளியானது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு நேற்றைய போட்டியில் களமிறக்கப்பட்டார் அர்ஜுன் டெண்டுல்கர்.
”விளையாட்டுக்கு மரியாதை கொடு” முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர்; சச்சின் தந்த அட்வைஸ்!
”விளையாட்டுக்கு மரியாதை கொடு” முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர்; சச்சின் தந்த அட்வைஸ்!Twitter

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் நேற்று களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இதனையடுத்து தனது மகனுக்கு அறிவுரை வழங்கி ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் தந்தை சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கதைகளில் ஒன்று சச்சின் டெண்டுல்கரின் கதை.

”விளையாட்டுக்கு மரியாதை கொடு” முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர்; சச்சின் தந்த அட்வைஸ்!
MS Dhoni: சென்னை அணி கேப்டனாக 200வது மேட்சில் ’தல’ தோனி - இதுவரை படைத்த சாதனைகள் என்ன?

16 வயதில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியவர் பல சாதனைகளை படைத்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள், இரட்டை சதமடித்த முதல் வீரர், அதிக முறை மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற வீரர், அதிக ஒரு நாள் போட்டிகளை விளையாடிவர் என இவரது பெயருக்கு பக்கத்தில் இருக்கும் சாதனைகள் ஏராளம்.

சர்வதேச போட்டிகள் அல்லாது சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடினார். அவரது ஓய்வுக்கு பிறகு அணியை ரோஹித் சர்மா வழிநடத்தி வருகிறார்.

சரவ்தேச அணியில் இன்று தடம் பதித்துள்ள பல முன்னணி வீரர்களை உலகுக்கு அடையாளம் காட்டியது ஐபிஎல் தான். அந்த வழியையே அர்ஜுன் டெண்டுல்கரும் பின்பற்றுகிறார்.

தந்தை விளையாடிய அதே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் விளையாடவுள்ளார் என்கிற செய்தி வெளியானது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு நேற்றைய போட்டியில் களமிறக்கப்பட்டார் அர்ஜுன் டெண்டுல்கர்.

இதனை தொடர்ந்து, ஒரு தந்தையாக தன் மகனுக்கு அட்வைஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

”விளையாட்டுக்கு மரியாதை கொடு” முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர்; சச்சின் தந்த அட்வைஸ்!
விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?

தன் ட்வீட்டில்,

“அர்ஜுன், இன்று ஒரு கிரிக்கெட் வீரனாக உனது பயணத்தில் அடுத்த முக்கிய படியில் எட்டு வைத்திருக்கிறாய். உன் தந்தையாக, விளையாட்டை மிகவும் நேசிக்கும் ஒருவனாக, நீ கிரிக்கெட்டிற்கு உரிய மரியாதையை தொடர்ந்து வழங்குவாய் என்பதை அறிவேன், அப்போது விளையாட்டும் உன்னை விரும்பும்” என்று பதிவிட்டிருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில், பௌலிங் ஆல் ரவுண்டராக களமிறங்கினார் அர்ஜுன் டெண்டுல்கர். இரண்டு ஓவர்களை வீசியர் 17 ரன்கள் கொடுத்திருந்த நிலையில், விக்கெட்கள் எதுவும் எடுக்கவில்லை.

அடுத்தடுத்த போட்டிகளிலும் அர்ஜுன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

”விளையாட்டுக்கு மரியாதை கொடு” முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர்; சச்சின் தந்த அட்வைஸ்!
Anand Mahindra: "ரிஸ்க் எடுக்கலைனா, ஒன்னும் இல்லாம போயிடுவோம்" - இளைஞர்களுக்கு 2 அட்வைஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com