MI vs PBKS: ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட அர்ஷதீப்; புகழ்ந்து தள்ளிய சாம் கரன் - போராடி தோற்ற MI!

அர்ஷதீப் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன் அடிக்க, அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்ப் தெறித்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்தது பஞ்சாப்.
MI vs PBKS: ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட அர்ஷதீப்; புகழ்ந்து தள்ளிய சாம் கரன் - போராடி தோற்ற MI!
MI vs PBKS: ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட அர்ஷதீப்; புகழ்ந்து தள்ளிய சாம் கரன் - போராடி தோற்ற MI!ட்விட்டர்
Published on

கடைசி ஓவரில் 16 ரன் தேவை என்றிருந்த நிலையில் வெறும் 2 ரன்களே வழங்கி, பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார் அர்ஷதீப் சிங். போட்டி முடிந்து மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன், இந்த விருதுக்கு தகுதியானவர் அர்ஷதீப் தான் என்றார்.

நேற்று மாலை மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில், பஞ்சாப் மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது மும்பை அணி.

களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன்கள் ஒரு பக்கம் வர மறுப்பக்கம் விக்கெட்களும் விழுந்தன. எனினும், அணிக்கு பக்கபலமாக நின்ற கேப்டன் சாம் கரன், 55 ரன்கள் எடுத்தார். ஹர்ப்ரீத் சிங்க் 41 ரன் எடுக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தது.

215 ரன்களை சேஸ் செய்ய வந்த மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன் வலு சேர்த்தனர். சூர்யகுமார் மற்றும் கேமரூன் முறையே 57, 67 ரன்கள் அடித்தனர்.

அர்ஷதீப் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன் அடிக்க, அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்ப் தெறித்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்தது பஞ்சாப்.

MI vs PBKS: ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட அர்ஷதீப்; புகழ்ந்து தள்ளிய சாம் கரன் - போராடி தோற்ற MI!
CSK vs MI: சென்னை, மும்பை போட்டியை ஐபிஎல்லின் El Clasico எனக் குறிப்பிடுவது ஏன்?

போட்டி முடிந்து பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதினை வென்றார் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன். அப்போது பேசியவர், "போட்டியின் போக்கை தன் பந்துவீச்சால் அர்ஷதீப் எப்படி மாற்றினார் என்பதை வைத்து பார்க்கும் போது இந்த விருதுக்கு அவர் தான் தகுதியானவர்.

ஷிகர் தவான் அணியில் இல்லாததால், நாங்கள் அனைவரும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அறிந்தோம். அருமையான சுற்றுச்சூழல் மற்றும் இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. 7ல் நான்கு போட்டிகளை வென்றிருக்கிறோம். இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். அழுத்தத்தை பொருட்படுத்தாமல், போட்டியை கொண்டாடுவது முக்கியம்."

அர்ஷதீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். தற்போது பர்பிள் கேப்புக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், "இன்னும் தொடரில் போட்டிகள் இருக்கின்றன. மூன்று போட்டிகளில் வென்றுள்ளோம், மூன்றில் தோற்றிருக்கிறோம். எங்கு தவறு நடந்தது என்பதை மனதில் வைத்து, வரும் போட்டிகளில் வெல்ல கவனம் செலுத்தவுள்ளோம்" என்றார்

MI vs PBKS: ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட அர்ஷதீப்; புகழ்ந்து தள்ளிய சாம் கரன் - போராடி தோற்ற MI!
CSK vs RCB: ”Result பற்றிய கவலை எனக்கு இல்லை” வெற்றிக்கு பின் என்ன பேசினார் கேப்டன் தோனி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com