”விளையாட வந்தோமா.. ஃபோட்டோ எடுக்க வந்தோமா?” - ரசிகரிடம் கடிந்து கொண்ட விராட் கோலி |video

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூச்சலிட்ட ரசிகர்களிடம் விராட் கோலி கோபமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Virat Kohli
Virat KohliNewsSense

2021ல் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்திருந்த இந்திய ரசிகர்கள், வீரர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

அங்குக் குவிந்த இந்திய ரசிகர்கள், இந்திய வீரர் கமலேஷ் நகர்கோட்டியுடன், புகைப்படம் எடுக்க விரும்பி சத்தம் போட்டனர்.

அப்போது ஓய்வு அறையிலிருந்து வந்த விராட் கோலி, ரசிகர்களிடம் ஏன் இவ்வளவு கூச்சல் என விசாரித்துள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், தான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து வந்துள்ளதாகவும், கமலேஷ் நகர்கோட்டியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட விராட் கோலி, நாங்கள் கிரிக்கெட் போட்டிக்கு வந்துள்ளோமா, இல்லை புகைப்படம் எடுப்பதற்கு வந்துள்ளோமா எனக் கோபத்துடன் கேட்டார்.

விராட் கோலியின் இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Ruturaj Gaikwad
Ruturaj GaikwadTwitter

இது போன்று சமீபத்தில் மழையின் காரணமாகக் களமிறங்கக் காத்திருந்த நேரத்தில், மைதானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ருதுராஜுடன் செல்ஃபீ எடுக்க வந்தபோது ருதுராஜ் தன் மீது உரசாமல், நகர்ந்து செல்லுமாறு சைகை காட்டிய வீடியோ ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli
Ruturaj Gaikwad: மைதான பணியாளரை மரியாதை இல்லாமல் நடத்திய ருதுராஜ்- வசைபாடும் நெட்டிசன்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com