marriage
marriageTwitter

முதல் மனைவி பிரசவத்துக்கு சென்ற இடைவெளியில் 2வது திருமணம் செய்த காவலர்

சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர் சிலரே முகம் சுழிக்கும் வண்ணம் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. முதல் மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்த போது வேறொரு பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
Published on

முதல் மனைவியை பிரசவத்துக்கு அனுப்பி வைத்து விட்டு 2வது திருமணம் செய்த போலீஸ்காரார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகாரத்தில் இருக்கும் சிலர் தங்களின் பதவிகளை தவறான பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து வருகிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர் சிலர் முகம் சுழிக்கும் வண்ணம் நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கேறியுள்ளது.

pregnancy
pregnancyTwitter

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தராஜா . இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதல் மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்த போது வேறொரு பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

2வதாக திருமணம் செய்துக்கொண்ட பெண்ணுக்கு இதுகுறித்து தெரிய வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருத்தராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல்விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரியலூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

marriage
சைலேந்திர பாபு : பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட தமிழ்நாடு டிஜிபி - நெகிழ்ச்சி சம்பவம்

முக்ற்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

logo
Newssense
newssense.vikatan.com