Chennai : புரட்டி போட்ட கனமழை; சென்னையை மீண்டும் தாக்கவுள்ளதா அடுத்த புயல்? உண்மை என்ன?
Chennai : புரட்டி போட்ட கனமழை; சென்னையை மீண்டும் தாக்கவுள்ளதா அடுத்த புயல்? உண்மை என்ன?Twitter

Chennai: 10ம் தேதி வருகிறதா அடுத்த புயல்? Fact Check

வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வெதன்மேன் பிரதீப் ஜான், அடுத்த புயல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
Published on

வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையை புரட்டிப் போட்டுவிட்டது. டிசம்பர் 4ம் தேதி பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஆர்பரித்தது.

அதனோடு இந்த புயல் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

புயல், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, கார்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

புயல் கரையை கடந்தும், வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் இதுவரை முழுமையாக மீளவில்லை. அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இன்னும் இயல்பு நிலை திரும்பாத பட்சத்தில், சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெதன்மேன் பிரதீப் ஜான், அடுத்த புயல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். டிசம்பர் 10 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம், அது இந்திய கடற்கரையை விட்டு நகரும், ஆனால் இதனால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என வெதன்மேன் விளக்கம் கொடுத்துள்ளார்.

வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chennai : புரட்டி போட்ட கனமழை; சென்னையை மீண்டும் தாக்கவுள்ளதா அடுத்த புயல்? உண்மை என்ன?
Chennai Floods: 'புயலுக்கு பின் அவலம்' - தலைநகரின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com