சென்னையில் ரயில் விபத்து : கடற்கரை நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு

பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற புறநகர் ரயில், நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் விபத்து
ரயில் விபத்து Twitter
Published on

மக்கள் அதிகம் கூடும் இந்த புறநகர் ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகக் காணப்பட்டது.

பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. நடைமேடையில் ஏறியதில் ரயில் பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன.

ரயிலில் யாரும் இல்லாததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

ரயில் விபத்து
Ola E - Scooter : 1,400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெற ஓலா நிறுவனம் முடிவு

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com