தனுஷ்கோடி: இந்தியாவின் கடைசி சாலை எங்கு இருக்கிறது தெரியுமா?

பேய் நகரம் என்று அழைத்த போதிலும், தனுஷ்கோடி தொலைதூரத்திலிருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. தனுஷ்கோடிக்கு செல்லும் பயணிகள், இந்தியாவின் கடைசி சாலையை பார்க்கிறார்கள்.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி Twitter

பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த நகரம் தான் இந்த தனுஷ்கோடி. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது.

இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். 54 ஆண்டுகளுக்கு தாக்கப்பட்ட ஒரு இயற்கை சீற்றதால் இந்த இடத்திற்கு பேய் நகரம் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்திய நிலப்பரப்பின் விளிம்பில் அமர்ந்திருக்கும் விசித்திரமான சிறிய கிராமத்தை பேய் நகரம் என்று அழைக்கின்றனர். தனுஷ்கோடியின் பேய் நகரம் என்று அழைக்கப்படும் இந்த கைவிடப்பட்ட கிராமம் இந்தியாவின் கடைசி சாலையின் தளம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது

தனுஷ்கோடி
தனுஷ்கோடிTwitter

தனுஷ்கோடியின் வரலாற்று முக்கியத்துவம்

தனுஷ்கோடி மகத்தான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அதன் வேர்கள் பழங்காலத்திலிருந்தே உள்ளன. இந்து புராணங்களின்படி, ராமர் தனது மனைவி சீதையை அரக்க மன்னன் ராவணனின் பிடியில் இருந்து மீட்பதற்காக இலங்கைக்கு செல்ல ராம சேது பாலம் கட்டிய இடம் இது என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய வரலாற்றில், தனுஷ்கோடி ஒரு பரபரப்பான கடற்கரை நகரமாகவும், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும் இருந்தது. இருப்பினும், 1964 ஆம் ஆண்டில் ஒரு பேரழிவுகரமான சூறாவளி இப்பகுதியை நாசமாக்கியது.

அப்போதிருந்து தனுஷ்கோடி மக்கள் வசிக்காமல், காலப்போக்கில் உறைந்து. இதனால் இந்த கிராமத்தை பேய் நகரம் என்று அழைக்கின்றனர்.

இந்தியாவின் கடைசி சாலை

பேய் நகரம் என்று அழைத்த போதிலும், தனுஷ்கோடி தொலைதூரத்திலிருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. தனுஷ்கோடிக்கு செல்லும் பயணிகள், இந்தியாவின் கடைசி சாலையை பார்க்கிறார்கள்.

இருபுறமும் பரந்து விரிந்த இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட இந்த சாலை வழியாக வாகனம் ஓட்டுவது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கிறது.

இடிந்த கட்டிடங்கள், பாழடைந்த கட்டமைப்புகள் மற்றும் காலப்போக்கில் உறைந்துபோன கைவிடப்பட்ட வீடுகள் வழியாக இந்த சாலை உங்களை அழைத்துச் செல்கிறது.

தனுஷ்கோடி
பாம்பன் பாலம் முதல் தனுஷ்கோடி வரை - ராமநாதபுரத்தில் பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

தனுஷ்கோடியின் இடிபாடுகள்

பழைய தனுஷ்கோடி ரயில் நிலையம், அதன் பாழடைந்த நடைமேடைகள் ஆகியவை நகரத்தின் நிலையை காட்டுகிறது.

அதுமட்டுமில்லாமல் தேவாலயம், தபால் அலுவலகம் மற்றும் சுங்க அலுவலகத்தின் எச்சங்கள் என ஒவ்வொன்றும் தனுஷ்கோடியின் துடிப்பான கடந்த காலத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறது.

தனுஷ்கோடி
தனுஷ்கோடி முதல் உனகோடி வரை - பேய் நகரமாக கருதப்படும் இந்திய நகரங்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com