கமல், வெற்றிமாறன், விஜய் சேதுபதி - ரோகிணி திரையரங்க விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்

"டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது” என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பதிவிட்டிருக்கிறார்.
கமல் முதல் வெற்றிமாறன் வரை - பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்
கமல் முதல் வெற்றிமாறன் வரை - பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்Twitter
Published on

பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிலரை சென்னை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே விட அனுமதி மறுத்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படம் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நேற்று வெளியானது.

ரிலீஸுக்கு முன்னதாக பத்து தல படத்திற்காக முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

சென்னை ரோகிணி தியேட்டரில் வழக்கம் போல கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.

இதற்கிடையில் அங்கு டிக்கெட்டுகளை சரிபார்த்து ஊழியர்கள் ரசிகர்களை படம் பார்க்க தியேட்டருக்குள் அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். அவர்கள் டிக்கெட் வைத்திருந்த நிலையிலும் ஊழியர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.

இதனைப் பார்த்தவர்கள் ஊழியர்களிடம் ஏன் டிட்கெட் இருந்தும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என வாக்குவாதம் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து பலரும் ஊழியர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி பிரகாஷ் ட்விட்டரில்

“ அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இதில் ‘பத்து தல’ திரைப்படம் யு/ஏ சென்சார் பெற்றது. இதனால் குழந்தைகளுடன் வந்த அவர்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தது ரோகிணி நிர்வாகம்.

இந்நிலையில் யு/ஏ சென்சார் என்றால் பெற்றோரோடு குழந்தைகள் திரைப்படம் பார்க்கலாம் என்றும் இதுபோன்ற ஏற்கமுடியாத விளக்கத்தை எப்படி தியேட்டர் நிர்வாகம் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், கமல்ஹாசன், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

"நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால், இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என இயக்குநர் வெற்றிமாறன் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

"டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது” என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பதிவிட்டிருக்கிறார்.

கமல் முதல் வெற்றிமாறன் வரை - பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்
தமிழ்நாடு : ஆளுநருக்கு தமிழிசை சப்போர்ட்; காண்டான கமல் - முழுமையான பின்னணி என்ன?

எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, டிக்கெட் இருக்குல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னு கேட்ட அந்த குரல்தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு என நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

ரோகினி திரையரங்கில் நரிக்குறர் மக்களுக்கு அனுமதிக்காதது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "எந்தவொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பூமி மனிதர்கள் எல்லோரும் வாழ்வதற்காக படைக்கப்பட்டது; வேற்றுமையை யார் கடைபிடித்தாலும் தவறுதான்" என்று கூறினார்.

“எல்லோரும் சமம்; எல்லோரும் ஒன்னுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் திரையரங்கமே வந்தது; திரையரங்கத்திற்கு நீ, நான் என்றெல்லாம் எதுவும் கிடையாது;

இந்த நிகழ்வால் மிகவும் வருத்தமடைகிறேன்" என சூரி வருத்தம் தெரிவித்திருகிறார்.

கமல் முதல் வெற்றிமாறன் வரை - பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்
பழங்குடியினர் உருவாக்கிய வேர்ப் பாலம் : மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாக மாறியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com