மழை
மழைTwitter

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? தஞ்சை கலெக்டர் காட்டம்!

நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1ம் தேதி முதலே மழை தொடங்கிவிடும். மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்வேன்.
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மழைக்காக விடுமுறை கிடைக்குமா என பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

சிலர் ஒரு அடி முன்னே சென்று மாவட்ட ஆட்சியருக்கே ஃபோன் செய்து விடுமுறைக் கேட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் விடுமுறைக் கேட்கும் பெற்றோர்களுக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்து விட்டாலோ பெற்றோர்கள் எனக்கு போன் செய்து, 'பள்ளிக்கு லீவு உண்டா?’ எனக் கேட்கின்றனர்.

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும் ? நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1ம் தேதி முதலே மழை தொடங்கிவிடும். மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்வேன்.

மழைக்காக விடுமுறை என நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால், இன்று உங்கள் முன் ஆட்சியராக நின்றிருக்க மாட்டேன்.

தயவு செய்து பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வாழ்க்கையில் கல்வி மட்டும்தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து." எனத் தெரிவித்துள்ளார்.

மழை
66 ஆண்டுகளில் அதிக மழை - பசுமையாக மாறிய பாலைவன மாநிலம் | கண்கவர் புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com