ஜல்லிக்கட்டு : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கைமுறையில் இன்றியமையாத ஒரு விளையாட்டாக இருந்து வந்துள்ளது. இந்த பெருமைமிக்க விளையாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள் இங்கே.
ஜல்லிக்கட்டு 

ஜல்லிக்கட்டு 

Facebook

Published on

2000 ஆண்டுகளாக தமிழர்கள் பின்பற்றும் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது ஜல்லிக்கட்டு.

இன்று வரை தங்களது வீரத்தைப் பறைசாற்றும் விதமாக தமிழ் நாட்டு இளைஞர்கள் ஒவ்வொரு பொங்கலிலும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக சிறப்புக் காளைகள் வளர்ப்பதுடன் அவற்றுக்கு தனியாக பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

இந்த விளையாட்டை ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு போன்ற பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கைமுறையில் இன்றியமையாத ஒரு போட்டியாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பெருமைமிக்க விளையாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்.

  • ஜல்லிக்கட்டில் இப்போது கொடுக்கும் படியான பரிசுப்பொருட்கள் முந்தைய காலத்தில் இல்லை. மாட்டின் கொம்பில் சல்லிக்காசு எனச் சொல்லப்படும் அன்றைய நாணயங்களை சிறிய பையில் போட்டு கட்டிவிடுவர். மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த காசுகள் சொந்தமாகும். இப்படி சல்லிக்காசை கட்டி விளையாடியதே இந்த விளையாட்டுக்கு சல்லிக்கட்டு - ஜல்லிக்கட்டு எனப் பெயர்வரக் காரணம்.

  • 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஜல்லிக்கட்டு விளையாடப்படுவதாக நம்பிக்கை உள்ளது. மதுரை சுற்றுவட்டாரத்தில் கண்டறியப்பட்ட பண்டைய ஓவியங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
  • ஜல்லிக்கட்டு, வாடி விரட்டு, வேலி விரட்டு, வடம் வடம் மஞ்சு விரட்டு ஆகிய பெயர்களில் 3 விதமாக நடைபெற்று வருகிறது.

  • ஜல்லிக்காட்டுகாக காளைகளை வளர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆண்டு முழுவது இந்த உறுதியான காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை பக்கத்தில் தெரியாத மனிதர்களை நெருங்க விடாத வண்ணம் வளர்க்கப்படுகிறது.

  • ஜல்லிக்கட்டு அன்று ஆன்மிக பூஜைகளும் நடத்தப்படுகின்றன. கோயில் காளைகளும் வாடிவாசல் வழி பாய்கின்றன. அவற்றை வீரர்கள் பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு&nbsp;</p></div>
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : தெறிக்கவிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் காளை
  • கடந்த 2004ம் ஆண்டு முதல் பீட்டா என்ற விலங்குகள் மேமாட்டு அமைப்பானது ஜல்லிக்கட்டு எதிராக பிரச்சாரம் செய்து வந்தது.

  • ஜல்லிக்கட்டு போட்டியின் 2500 ஆண்டுகால வரலாற்றில் 2017ம் ஆண்டு நடந்த மெரினா போராட்டம் முக்கியமான பகுதியாக இடம் பெற்றது. இந்த போராட்டத்தின் வெற்றியே இப்போது வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை இல்லாமல் நடக்க காரணமாக இருந்துள்ளன.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு&nbsp;</p></div>
கேஜிஎஃப் 2: ரத்தம் சிந்திய கோலார் தமிழர் துயர வரலாறு - விரிவான தகவல்கள்
  • ஜல்லிக்கட்டு விளையாட்டு பல திரைப்படங்களில் காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விருமாண்டி, முரட்டு காளை, சேரன் பாண்டியன், மிருகம் மற்றும் பல படங்கள்.

  • ஜல்லிக்கட்டில் வீரர்களால் அடக்க முடியாத வலிமையான காளைகளை இனப் பெருக்கத்துக்கும் அடக்கப்பட்ட காளைகளை வீட்டு வேலைக்கும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

  • தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர்பெற்றது. அதன் சுற்றுவட்டார கிராமங்களான அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ்பெற்றவை.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு&nbsp;</p></div>
ஜல்லிக்கட்டு : 9,699 காளைகள்; 5,399 வீரர்கள் பதிவு- யார் நடத்துகின்றனர்?- விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com