ஜல்லிக்கட்டு : 9,699 காளைகள்; 5,399 வீரர்கள் பதிவு- யார் நடத்துகின்றனர்?- விரிவான தகவல்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் நடத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு தரப்புக்கும் அவனியாபுரம் கிராம கமிட்டி என்ற பெயரில் மற்றொரு தரப்புக்கும் போட்டி எழுந்தது.
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Twitter 

Published on

தமிழகத்தில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

15ம் தேதி அவனியாபுரத்திலும் 16ம் தேதி பாலமேட்டிலும் 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என முடிவாகியிருக்கிறது.

இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் நடத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு தரப்புக்கும் அவனியாபுரம் கிராம கமிட்டி என்ற பெயரில் மற்றொரு தரப்புக்கும் போட்டி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சாமாதன பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்த முடிவும் கிடைக்காததால் மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 17 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க 9,699 காளைகளும் 5,399 மாடுபிடி வீரர்களும் இணையத்தில் பதிவு செய்திருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் 600 வீரர்கள், 300 காளைகள் என பங்கேற்கவுள்ளனர் (தோராயமாக).

வாடிவாசலில் அவிழ்க்கப்படும் காளைகள் காளை பரிசோதனை சான்றிதழ், காளை இனம் தொடர்பான சான்றிதழ், காளை கொண்டு செல்லும் வாகனப்பதிவு சான்றிதழ், காளையின் வயது குறித்த சான்றிதழ், காளை எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்த விபரம், காளைக்கு தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் போன்றவற்றை நிச்சயம் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு</p></div>
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இறுதி 20 நிமிடங்கள் பரபரப்பாக ஆடி முதல் பரிசை வென்ற கார்த்தி

வாடிவாசல் அமைப்பது, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வது என வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மாட்டை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களை வெல்லும் மாடுகளுக்கும் கொடுக்கப்பட பரிசுகள் தயாராக இருக்கின்றன.

அதே வேளையில் மாடுகளால் தாக்கப்படும் வீரர்களுக்கு முதலுதவி வசதி மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

போட்டியில் பங்கேற்கும் வீரர்கல் விதி மீறலில் ஈடுபட்டால் உடனடியாக போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள் எனவும் மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகப்படியான கூட்டம் கூடும் என்பதால் பாதுகாப்பு அளிக்க 1300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு</p></div>
ஜல்லிக்கட்டு: தமிழரின் வீர விளையாட்டில் பயன்படுத்தப்படும் மாட்டு வகைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com