ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?
ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?Twitter

ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?

"எங்கள் சமுதாயத்தில் பெண்களை அண்டை மாவட்டத்துக்கு படிக்க அனுப்பவே தயங்குகின்றனர். அத்துடன் பெண்களுக்கு இவ்வளவு செலவு தேவையா என்றும் கேள்வி கேட்பார்கள்."
Published on

நீலகிரி படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்த சமுகத்தின் முதல் பெண் விமானியாகி சாதித்துள்ளார்.

கோத்தகிரி, நெடுகுளா குருக்கத்தியில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி மணி. இவரது மகள் ஜெயஸ்ரீ. இவர் தென்னாப்பிரிக்காவில் விமானப்பயிற்சி பெற்று படுகர் சமுகத்தின் முதல் விமானியாக உருவாகியிருக்கிறார்.

இது குறித்து ஜெயஸ்ரீ பேசும்போது, "எங்கள் சமுதாயத்தில் பெண்களை அண்டை மாவட்டத்துக்கு படிக்க அனுப்பவே தயங்குகின்றனர். அத்துடன் பெண்களுக்கு இவ்வளவு செலவு தேவையா என்றும் கேள்வி கேட்பார்கள்.

ஆனால் எனது பெற்றோர் மற்றொரு நாட்டுக்கு தைரியமாக என்னை அனுப்பிவைத்தனர். பெண்களுக்குத்தான் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்." எனக் கூறியுள்ளார்.

ஜெயஸ்ரீ கோத்தகிரி தனியார் பள்ளியில் படித்தவர். தனியார் கல்லூரியில் இஞ்சினியரிங் படித்து சில காலம் ஐடி துறையில் பணியாற்றினார். பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று விமானியாவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டார்.

pilot / representation
pilot / representation

விமானிகளின் பணிகுறித்து பேசிய ஜெயஸ்ரீ, "விமானியாக பணியாற்றுவது ஏதோ ஊர் சுற்றும் வேலை என பலரும் எண்ணுகின்றனர். ஆனால் எங்கள் வேலையில் பல சவால்கள் இருக்கின்றன. 3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை உடல் மற்றும் மனநல சோதனை நடைபெறும். மனதளவில் மிகவும் உறுதியானவர்கள் மட்டுமே விமானி பணியில் நீடிக்க முடியும். " எனக் கூறியுள்ளார்.

ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?
Apong: பீர் தயாரிக்கும் பெண்கள் - பழங்குடி மக்களின் வினோத மதுபானம் பற்றி தெரியுமா?

மேலும் ஜெயஸ்ரீ இப்படி சவாலன பணியை நான் தேர்ந்தெடுக்க காரணம் தனது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் கல்வியும் தான் என்றும். நீலகிரி மாவட்டத்திலும் படுகர் சமுகத்திலும் முதல் பெண் விமானியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

படுகர் சமூக மக்கள் நீலகிரி, ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப்பிரிவில் இருக்கும் இந்த மக்கள் தங்களை பழங்குடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?
மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com