மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!

ஏற்கெனவே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் மேலேங்கியிருக்கும் மெய்தேய் மக்கள் மலைகளில் வாழ அனுமதிக்கப்பட்டால் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். எங்களது வாழ்விடங்கள் பறிக்கப்படும் என பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர்.
மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!
மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!Twitter

மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வீடியோ வைரலானது.

இந்த வீடியோ மே 4ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மெய்தேய் பெண்களை பழங்குடி ஆண்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்த வதந்தியால் மெய்தேய் ஆண்கள் இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த வன்முறைகள் எங்கு தொடங்கின? காலாகாலமாக இந்த இரண்டு இன மக்களுக்கு இடையில் இருக்கும் பிரச்னை என்ன? மணிப்பூர் அரசியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வன்முறை எங்கே தொடங்கியது?

மெய்தேய் மக்களை பட்டியல் பழங்குடி (ST) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது.

இந்த கோரிக்கையை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்கள் சங்கம் "பழங்குடிகள் ஒற்றுமை பேரணி" ஏற்பாடு செய்தனர்.

பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் தான் முதல் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

வன்முறை அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியது. கிராமங்கள் குறிவைக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை களமிறங்கி வன்முறையைக் கட்டுப்படுத்தியது. இந்த காலகட்டத்தில் தான் இப்போது இணையத்திலிருந்து நீக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ள பெண்களின் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!
வரலாற்றில் இன்று : மணிப்பூர் மாநில அந்தஸ்தைப் பெற்ற நாள் - இந்த நாளில் என்னென்ன நடந்தது?

மணிப்பூரின் மெய்தேய் சமூகத்துக்கும் பழங்குடி மக்களுக்கும் என்ன பிரச்னை?

மணிப்பூர் குறித்து அறிந்துகொள்வது அங்குள்ள அரசியல் பிரச்னைகளை அடையாளம் காண உதவும்.

மணிப்பூர் மாநிலம் பெரும்பாலும் காடுகள் நிறைந்தது. மணிப்பூரின் நிலப்பரப்பில் 77.20 விழுக்காடு காடுகளால் ஆனது.

மணிப்பூரின் மக்கள் தொகை ஏறத்தாள 28 லட்சம். இதில் மெய்தேய் சமுகத்தினர் 53 விழுக்காடு இருக்கின்றனர்.

பல பழங்குடி இனக்குழுக்களும் இருக்கின்றனர். அவர்களை நாகா மற்றும் குக்கி பழங்குடிகள் எனப் பிரிக்கலாம்.

மணிப்பூரில் உள்ள 90% நிலங்களான மலைகள், காடுகளில் இந்த பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.10% உள்ள சமவெளிகளில் மெய்தேய் மக்கள் வசிக்கின்றனர்.

ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதிகளை அதிகரிப்பதனால் ஏற்கெனவே பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை இழந்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!
"நாங்கள் இந்துக்கள் அல்ல" - பழங்குடி மக்கள் கிளர்ச்சி செய்வது ஏன்?

எஸ்.டி சட்டதிருத்தம் மலைப்பகுதியில் பிற இன மக்கள் (மெய்தேய்) வசிப்பதை தடுக்கிறது.

பழங்குடி மக்கள் தொடர்ந்து வறுமையில் வாடுபவர்களாக இருக்கின்றனர். வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் மெய்தேய் மக்களை விட பின் தங்கியிருக்கின்றனர்.

பழங்குடி மக்களில் ஒரு பகுதியினர் போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அரசு எடுக்கும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமையே இந்த நிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பழங்குடி மக்கள், பழங்குடி மதங்கள், கிறிஸ்தவத்தை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லா பிரிவு பழங்குடி மக்களும் மெய்தேய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்தை கொடுப்பதை எதிர்க்கின்றனர்.

manipur
manipur


அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியகாரணமாக சொல்லப்படுவது,

மெய்தேய் மக்கள் சட்டமன்றத்தில் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏக்களை வைத்திருக்கின்றனர். அதாவது மாநிலத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவர்களது ஆதிக்கம் இருக்கிறது.

மெய்தேய் பழங்குடி மக்களுக்கு ஏற்கெனவே எஸ்.சி, பி.சி மற்றும் ஈ.டபிள்யூ.எஸ் இட ஒதுக்கீடுகள் கிடைக்கின்றன. அவர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து கிடைத்தால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என பழங்குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.

மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!
இந்தியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற பழங்குடி அருங்காட்சியகங்கள்

தற்போது இருக்கும் நடைமுறைகளின் படி மெய்தெய் மக்கள் மலைப்பகுதிகளில் குடியேற முடியாது. ஆனால் பழங்குடி மக்கள் இம்பால் போன்ற பள்ளத்தாக்கு மற்றும் சமவெளி பகுதிகளில் குடியேறலாம்.

இதனால் எங்களுக்கு வாழிடம் இருக்காது என மெய்தேய் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் மெய்தேய் மக்கள் மலைகளில் வாழ அனுமதிக்கப்பட்டால் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். எங்களது வாழ்விடங்கள் பறிக்கப்படும் என பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர்.

மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!
Apong: பீர் தயாரிக்கும் பெண்கள் - பழங்குடி மக்களின் வினோத மதுபானம் பற்றி தெரியுமா?


மெய்தேய் மக்களுக்கு பழங்குடி அங்கீகாரம் கிடைத்தால், அரசில் பழங்குடி மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதோடு, அரசாங்க சலுகைகளும் கிடைக்காமல் போகும் என கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் பழங்குடி மக்களில் தனித்துவமான கலாச்சாரம் அழிந்துவிடும் அபாயமும் இருப்பதாக பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மெய்தேய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டால் சட்டமன்றத்தில் அவர்களது பிரதிநிதித்துவம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!
மணிப்பூர்: பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் கும்பல் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com