காக்கா பிரியாணியா? மர்ம முறையில் காகங்கள் உயிரிழப்பு - பொள்ளாச்சியில் பரபரப்பு

தோட்டங்களிலும் சாலைகளிலும் மயங்கி விழுந்த 50 க்கு மேற்பட்ட காகங்கள் பின்னர் இறந்து கிடந்திருக்கின்றன. அந்த காகங்களை சாக்கு பைகளில் எடுத்து கொண்டு ஒருவர் தப்பிக்க முயன்றிருக்கிறார்.
காக்கா பிரியாணியா? மர்ம முறையில் காகங்கள் உயிரிழப்பு -  பொள்ளாச்சியில் பரபரப்பு
காக்கா பிரியாணியா? மர்ம முறையில் காகங்கள் உயிரிழப்பு - பொள்ளாச்சியில் பரபரப்புTwitter
Published on

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் காரணம் தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர் இறந்து கிடந்த காகங்களை சாக்கு பைகளில் போட்டு எடுத்துச் சென்றிருக்கிறார். இதனை கண்ட அந்த விவசாயி அந்த நபரை பிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக மற்ற விவசாயிகளும் அந்த நபரை உடனே பின்தொடர்ந்து சென்று சந்திராபுரம் பகுதியில் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை பெரியக் கவுண்டனூர் அழைத்து வந்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரித்தபோது,

அந்த நபர், தான் நீண்ட காலம் குஜராத்தில் இருந்ததாகவும் செஞ்சி வாடி பகுதியைச் சேர்ந்தவர், சர்க்கஸில் வேலை பார்ப்பவர் என்றும் பெயர் சூர்யா, வயது 37 என்றும் தெரிவித்திருக்கிறார்.

அந்த நபர், மூக்கு பொடியுடன் ஏதோ ஒரு விஷ மருந்து கலந்து அங்கங்கே தூவியதும் அதை சாப்பிட்ட காகங்கள் மயங்கி விழுந்ததும் தெரிய வந்துள்ளது.

தோட்டங்களிலும் சாலைகளிலும் மயங்கி விழுந்த 50 க்கு மேற்பட்ட காகங்கள் பின்னர் இறந்து கிடந்திருக்கின்றன. அந்த காகங்களை அவர் சாக்கு பைகளில் எடுத்து கொண்டு தப்பிக்க முயன்றிருக்கிறார்.

காக்கா பிரியாணியா? மர்ம முறையில் காகங்கள் உயிரிழப்பு -  பொள்ளாச்சியில் பரபரப்பு
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

ஏன் இவ்வாறு செய்தார் என்று போலீசார் கேட்க,

வெண்ணிற படை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பதற்காக தான் காகங்களை கொன்றதாக அந்த நபர் கூறியிருக்கிறார். ஆனாலும் போலீஸாருக்கு பிரியாணிக்காக காகங்களை எடுத்துச் செல்கிறார் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.

மருந்து தயாரிப்பதற்காக அந்த காகங்களை வேட்டையாடவில்லை. ஏதோ ஹோட்டலில் கொடுத்து பணம் பார்ப்பதற்காக தான் இந்த வேலையை செய்து இருக்கிறார் என்று பேச்சு எழுந்திருக்கிறது. இதனால் பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காக்கா பிரியாணியா? மர்ம முறையில் காகங்கள் உயிரிழப்பு -  பொள்ளாச்சியில் பரபரப்பு
பிரியாணி உடன் என்னென்ன சேர்த்து சாப்பிடக் கூடாது? என்னென்ன சாப்பிடலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com