மன அழுத்தம் டு காதல் திருமணம்; காப்பகத்தில் மலர்ந்த காதல் - ஒரு நெகிழ்ச்சி கதை!

அந்த வகையில் கீழ்பாக்கம் மன நலக் காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்த இருவர், காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
மன நல காப்பகத்தில் மலர்ந்த காதல்
மன நல காப்பகத்தில் மலர்ந்த காதல்டிவிட்டர்
Published on

மன நல காப்பகத்திற்கு சிகிச்சைக்காக வந்த இருவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. இந்த செய்தி அறிந்த இணையவாசிகள், இந்த தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காதலுக்கு பேதங்கள் தெரியாது என்று காலம் காலமாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். அதே போல காதல் எந்த தருணத்தில் யாருக்குள் தோன்றும் என்பதும் மர்மம் தான்.

அந்த வகையில் கீழ்பாக்கம் மன நலக் காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்த இருவர், காதலித்து இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

மன நல காப்பகத்தில் மலர்ந்த காதல்
டிராஃபிக் சிக்னலில் மலர்ந்த காதல்: திருமணத்தில் முடிந்த சுவாரஸ்ய கதை - என்ன நடந்தது?

சென்னையை சேர்ந்த மகேந்திரன். இவருக்கு 42 வயது. இவர் மன நல சிகிச்சைக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கீழ்பாக்கம் மன நல காப்பகத்திற்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேந்திரன் இருமுனையப் பிறழ்வால் (Bipolar Affective Disorder) பாதிக்கப்பட்டுள்ளார்.

அதே காப்பகத்திற்கு மன அழுத்ததுக்கான சிகிச்சைக்காக தீபா என்பவர் வந்துள்ளார். இவர் வேலூரை சேர்ந்தவர். காப்பகத்தில் தான் இருவரும் பேசிப்பழகியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் பிடித்துப்போகவே, அது காதலாக மாறியுள்ளது.

தீபாவை முதன்முதலில் பார்த்தபோது மகேந்திரனுக்கு அவரது அம்மாவை போல தோன்றியதாக அவர் கூறினார். பேசிப் பழகியதில் அவர் ஆசிரியர் என்பதும் தெரியவந்துள்ளது. மகேந்திரனின் தாயாரும் ஆசிரியர் என்பதால் தீபாவை இன்னும் அதிகமாக பிடித்துவிட்டது. "என் வாழ்க்கையில் உள்ள அனைத்து உறவும் இவரது உருவத்தில் எனக்கு கிடைத்தது" என மனம் உருகுகிறார் மகேந்திரன்.

தீபா கூறுகையில், "என் வாழ்க்கையில் எனக்கு திருமணம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்றவர், இது அதிசயமாக இருக்கிறது என்று பூரித்தார்.

இன்று மகேந்திரன் தீபா திருமணம் நடந்தது. திமுக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தீபா மகேந்திரன் திருமணம் கீழ்பாக்கம் காப்பகத்திலேயே நடந்தது.

மன நல காப்பகத்தில் மலர்ந்த காதல்
60 வயதில் மலர்ந்த காதல் : ஆப்ரிக்க பழங்குடி நபரை திருமணம் செய்த அமெரிக்க பெண் - அடடே கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com