Nilgiris : காலி மதுபாட்டில் கொடுத்தால் ரூ.10 கொடுக்கப்படும் - நீலகிரியில் புதிய திட்டம்

காலியான மதுபாட்டில்களை சாலைகளில் வீசி எறியாமல் பத்திரமாக எடுத்துவந்து டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுத்தால் பத்து ரூபாய் கொடுக்கப்படும் என்ற அசத்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டுவந்துள்ளார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்.
Alcohol
AlcoholTwitter
Published on

மலை மாவட்டங்களில் மது அருந்துபவர்கள், அதிகம் காலிசெய்யப்பட்ட மதுபாட்டில்களை அப்படியே சாலையோரங்களில், அல்லது வனப்பகுதிகளில் வீசிவிட்டுச் செல்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமல்லாமல், வனவிலங்குகளுக்கு காயங்களும் ஏற்படுகின்றன. சில சமயங்களில் விலங்குகள் அதை உட்கொள்ளவும் செய்கின்றன.

இவைற்றைக் கருத்தில்கொண்டு, ஒரு அசத்தல் திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித். அதாவது, காலியான மதுக்குப்பிகளை எடுத்துவந்து டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்தால் பத்து ரூபாய் வழங்கப்படுமாம்.

Liquor
LiquorTwitter


டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு, இன்று முதல் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அந்த பாட்டில்கள் காலியான பின் அதை டாஸ்மாக்கில் கொடுத்தால், அந்த பத்து ரூபாயைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர 15 இடங்களில் மதுபட்டில்கள் சேகரிப்பு மையங்கள் துவங்கவுள்ளன.

Alcohol
Tasmac : தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு - மது பிரியர்கள் அதிர்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com