தமிழகத்தில் கலர் பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்!

'பிங்க்' கலர் பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசும் தடை விதித்தது. சென்னை மாவட்ட உணவு பொருள் நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவு பொருள் அதிகாரிகள் சென்னையில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கலர் பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்!
தமிழகத்தில் கலர் பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்!Twitter

பல்வேறு இடங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருவதை பார்த்திருப்போம், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சுற்றுலா இடங்களில் வட மாநில இளைஞர்கள் பல்வேறு நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த பஞ்சு மிட்டாயை புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

இதனை தொடர்ந்து 'பிங்க்' கலர் பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசும் தடை விதித்தது. சென்னை மாவட்ட உணவு பொருள் நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவு பொருள் அதிகாரிகள் சென்னையில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கலர் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கலர் பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்!
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com