திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை! ட்விட்டரில் டிரெண்டாகும் #NorthIndians; என்ன நடக்கிறது?

"வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.
திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை
திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலைTwitter
Published on

வடமாநிலத்தவர்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார், இதனையடுத்து North Indians என்ற ஹேஷ்டாக் ட்விட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரவிய தகவல் பீகார் சட்டமன்றம் வரை ஒலித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பாஜகவின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, `வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்பது வெட்கக் கேடு" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,

வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.

அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை
அண்ணாமலை: ”காவல் துறை திமுகவின் பிடியில் இருக்கிறது” - சீரிய பாஜக தலைவர் - என்ன பேசினார்?

இதனையடுத்து ட்விட்டரில் காரசாரமான விவாதங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் North Indians மற்றும் அண்ணாமலை என்ற ஹேஷ்டாக் ட்விட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த ஹேஷ்டாக்கின் கீழ் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இரு தரப்பினர்கள் இடையே மோதல் மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை தெரிவித்ததாக நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை
Rafale Watch : அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com