அதானி நிறுவன சர்ச்சை : இந்தியன் எக்ஸ்பிரஸ் விருதை மறுத்தார் சுகிர்தராணி

இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் விருதுக்காக நன்றி தெரிவித்த சுகிர்தராணி, அதனை மறுப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அதானி குழுமம் முதன்மை ஸ்பான்சராக இருப்பதே தனது மறுப்புக்கு காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
சுகிர்தராணி : இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது மறுப்பு - அதானி நிறுவனம் தான் காரணம்?
சுகிர்தராணி : இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது மறுப்பு - அதானி நிறுவனம் தான் காரணம்?Twitter
Published on

சுகிர்தராணி தமிழ் இலக்கிய சூழலில் வெகுவாக அறியப்படும் கவிஞராக இருக்கிறார். அடிப்படையில் இவர் இரு தமிழ் ஆசிரியர்.

`கைப்பிடித்து என் கவிதை கேள்’, `இரவு மிருகம்’, `அவளை மொழிபெயர்த்தல்’, `தீண்டப்படாத முத்தம்’, `காமத்திப்பூ’, `இப்படிக்கு ஏவாள்’ ஆகிய படைப்புகளை இயற்றியிருக்கிறார்.

தலித் விடுதலை, பெண் விடுதலை உள்ளிட்ட சமூக சீர்திருத்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக நடைபெற்று வரும் தேவி விருதுகள் என்ற பெண்களை அங்கீகரிக்கும் விழா மூலமாக சுகிர்தராணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட இருந்தது.

இது குறித்து, "கவிஞர் சுகிர்தராணி, தனது தமிழ் மற்றும் தலித்திய இலக்கியத்துக்காக பாராட்டுகளைப் பெற்றவர். பிப்ரவரி 8 தேதி Indulge தேவி விருதுகளில் அங்கீகரிக்கப்படும் 12 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என ட்விட்டர் பதிவின் மூலம் அறிவித்திருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சுகிர்தராணி : இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது மறுப்பு - அதானி நிறுவனம் தான் காரணம்?
அதானி குழுமம் மோசடி செய்கிறதா? : ஹிண்டன்பெர்க் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவைதான் Explained

இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் விருதுக்காக நன்றி தெரிவித்த சுகிர்தராணி, அதனை மறுப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அதானி குழுமம் முதன்மை ஸ்பான்சராக இருப்பதே தனது மறுப்புக்கு காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.

அவரது பேஸ்புக் பக்கத்தில், " இந்நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பது நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பிலிருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை. எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

சுகிர்தராணி : இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது மறுப்பு - அதானி நிறுவனம் தான் காரணம்?
வெந்து தனிந்தது காடு: ஹிட்டான மல்லிப்பூ பாடல் - உணர்ச்சி வசப்பட்ட கவிஞர் தாமரை

மேலும் அதில், "நான் எப்போதும் என் அரசியல் தெளிவு மற்றும் தெரிவிலிருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றும் கூறியிருந்தார்.

ஏற்கெனவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கிரண் பேடி உள்ளிட்ட பலருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகிர்தராணி : இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது மறுப்பு - அதானி நிறுவனம் தான் காரணம்?
அதானி மீது அடுத்த பகீர் குற்றச்சாட்டு: அதிர வைக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com