துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் - கண்ணீரோடு தாலிக்கட்டிய 90ஸ் கிட்ஸ் மாப்பிள்ளை| Video

விலங்கு ஒன்றிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அழைத்து வந்த கால்நடை மருத்துவரைத் துப்பாக்கி முனையில் பெண்ணிற்குத் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது.
Marriage (Rep)
Marriage (Rep)Pexels
Published on

போன்றபீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவரை விலங்குக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வரவழைத்துள்ளனர்.

பின்னர் அவரை 3 பேர் சேர்ந்து கடத்திச் சென்று, மணமகன் போல் அலங்கரித்து அருகில் மணப் பெண்ணை உட்கார வைத்து துப்பாக்கி முனையில் தாலி கட்ட வைத்துள்ளனர்.

Marriage (Rep)
Marriage (Rep)Pexels

அழுதுகொண்டே மணப்பெண்ணிற்கு இந்த கால்நடை மருத்துவரும் தாலிகட்டியுள்ளார். இவர் அழுதுக்கொண்டே தாலி கட்டும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து கால்நடை மருத்துவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற சில பகுதிகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு எனக் கூறப்படுகிறது.

Marriage (Rep)
நாடு கடந்த காதல்; வங்காளதேசம் முதல் இந்தியா வரை நீந்தி வந்த இளம் பெண் - என்ன நடந்தது?

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பீகாரில் இதேபோன்று சம்பவம் அரங்கேறி உள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வேறொரு கல்யாணத்துக்குச் சென்றுள்ளார் அப்போது அவரை கடத்தி திருமணம் செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Marriage (Rep)
கணவரின் மறுபிறவி என நம்பி நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த பெண்மணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com