Band வாத்தியத்திற்கு யார் பணம் கொடுப்பது? - திருமணத்தை நிறுத்திய மணமகன்

திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேண்ட் வாத்தியத்திற்கு யார் கட்டணம் செலுத்துவது என்று ஏற்பட்ட தகராறால் கோபமான மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
Music band
Music bandTwitter
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக பரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியம் எனப்படும் இசைக்குழு ஒன்றை தர்மேந்திரா அழைத்து வந்தார்.

Marriage
MarriagePexels

திருமணத்தின் போது இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய இசைக்குழுவினர் பணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து மணமகள் வீட்டில்தான் பணம் தரவேண்டும் என்று மணமகன் வீட்டில் கூறி உள்ளனர்.

இதற்கு மணமகள் தரப்பினர் தாங்கள் இசைக்குழுவை வரவழைக்கவில்லை எனக்கூறி, இசைக்குழுவினருக்குப் பணம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

Music band
துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் - கண்ணீரோடு தாலிக்கட்டிய 90ஸ் கிட்ஸ் மாப்பிள்ளை| Video
Marriage
MarriageTwitter

இதனால் திருமண நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த மணமகன் தனது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறி மணமேடையில் இருந்து வெளியேறினார்.

பேண்ட் வாத்திய குழுவினருக்கான யார் பணம் கொடுப்பது என்று ஏற்பட்ட தகராறால் திருமணமே நின்றுபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Music band
திருமணம் ஆன 45 நாட்களில் தங்க நகைகளுடன் முன்னாள் காதலனுடன் சென்ற பெண் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com