76 ஆண்டுகள் கழித்து மகளை கண்டுபிடித்த தாய் - என்ன நடந்தது?

பல தசாப்தங்கள் கடந்தும் தன் மகள் லாரா பற்றிய நினைவு அவரை ஆட்கொண்டிருந்தது. சமீபத்தில் மர்ஜொரீயின் மகள் ஏஞ்சலா ரிக்பி, பிபிசி தளத்தில் நிகழ்ச்சி ஒன்றை பார்த்துள்ளார்.
76 ஆண்டுகள் கழித்து மகளை கண்டுபிடித்த தாய்
76 ஆண்டுகள் கழித்து மகளை கண்டுபிடித்த தாய் Twitter
Published on

76 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகள் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்துள்ள பெண்ணின் கதை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

மர்ஜொரீ ரிக்பி என்ற அந்த பெண்ணுக்கு தற்போது 102 வயது. இவர் இரண்டாம் உலக போரில் பெண்கள் துணை விமானப் படையில் இருந்தார். இவருக்கு செப்டம்பர் 1946ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது.

குழந்தை பிறக்கும் போதே இறந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் குழந்தையை தன்னிடமிருந்து எடுத்து சென்ற பிறகு ஓரிரு வாரங்களில் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டனர் எனவும் அவர் கூறினார்.

ஆனால் அதன் பிறகு மர்ஜொரீ குழந்தையை பார்க்கவில்லை, குழந்தைக்கு என்ன ஆனது என்பது பற்றியும் அவருக்கு தெரியாது.

மர்ஜொரீக்கு அதன் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தாலும், தனது முதல் குழந்தையை பற்றிய நினைவு இருந்து வந்தது என்றும், குழந்தைக்கு என்ன ஆனது என தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் இருந்ததாக பிபிசி செய்தி தளத்திடம் அவர் கூறினார்.

76 ஆண்டுகள் கழித்து மகளை கண்டுபிடித்த தாய்
கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்- ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

"நான் வீட்டிற்கு வந்த பிறகு என்னை தனியாக விட்டுவிட்டனர். இப்படி ஒரு நிகழ்வுக்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டும், என் வாழ்க்கையை எப்படி இதற்கு மேல் நகர்த்த வேண்டும் என யாரும் ஆறுதல் சொல்லவில்லை."

பல தசாப்தங்கள் கடந்தும் தன் மகள் லாரா பற்றிய நினைவு அவரை ஆட்கொண்டிருந்தது. சமீபத்தில் மர்ஜொரீயின் மகள் ஏஞ்சலா ரிக்பி, பிபிசி தளத்தில் Brief Lives Remembered தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியை பார்த்துள்ளார். அதில் ஒரு பெண் 60 வருடங்களுக்கு முன் இறந்த தன் மகன் புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்ததாக செய்தி வெளியானது. இதை பார்த்த ஏஞ்சலீனா அந்த தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

அந்த தொண்டு நிறுவனம், லாரா புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்தது. லாரா புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில், அவளுடன் சேர்த்து மொத்தம் 6 குழந்தைகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், மற்றொரு நபரும் அந்த சவப்பெட்டியில் புதைக்கப்பட்டிருந்தார் எனவும், ஏஞ்சலீனா கூறினார்.

தனது மகள் உறங்கிக்கொண்டிருக்கும் இடத்தை அறிந்த பிறகு தான் அவருக்கு தற்போது ஆறுதலாக இருப்பதாக மர்ஜொரீ சொல்லியிருக்கிறார்.

76 ஆண்டுகள் கழித்து மகளை கண்டுபிடித்த தாய்
மகன் - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது தாய் : எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com