டெக்சஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி - வாலிபர் வெறிசெயல்

உவால்டே பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ரைபிள் துப்பாக்கி ஒன்றுடன் பள்ளிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டிருக்கிறார். 18 குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர்.
கொலையாளி
கொலையாளிTwitter
Published on

அமெரிக்காவிலுள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி உள்பட 20 பேர் பலியாகியுள்ளது தெரியவந்திருக்கிறது.

டெக்சஸ் மாகாணம், சான் அன்டோனியோவிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் உவால்டே. இந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பள்ளியில் நுழைந்த 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கண்ணீரில் பெற்றோர்கள்
கண்ணீரில் பெற்றோர்கள்Twitter

உவால்டே பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ரைபிள் துப்பாக்கி ஒன்றுடன் பள்ளிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டிருக்கிறார். 18 குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். 10 வயதுக் குழந்தை மற்றும் 66 வயது நபர் ஒருவரும் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தை நடத்தும் முன் கொலையாளி தனது பாட்டியைக் கொன்றிருக்கிறார் என அமெரிக்கச் செய்தி தளங்கள் கூறுகின்றன.

இந்த வெறிச்செயலை நடத்திய சல்வாடர் ரமோஸ் என்ற இளைஞரை சம்பவ இடத்திலேயே காவல்த்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொலையாளி
உலகை உலுக்கிய மிக மோசமான 11 விமான விபத்துகள் | பாகம் 1
கொலையாளியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள்
கொலையாளியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள்Twitter

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியதாவது, "இது செயல்பட வேண்டிய நேரம். துப்பாக்கிச் சட்டங்களைத் தாமதிப்பவர்களுக்கு/தடுப்பவர்களுக்கு இந்தக் கொடூரத்தைத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களிடம், ஒரு தேசமாக, நாம் எப்போது துப்பாக்கி லாபிக்கு எதிராக நிற்கப் போகிறோம் என்று கேட்க வேண்டும்" எனப் பேசியிருக்கிறார். அத்துடன் இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கள் தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் அரைகம்பத்தில் கொடியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொலையாளி
பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையாளி
உக்ரைன் : "பாலியல் வன்கொடுமையை ரஷ்ய வீரர்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்"

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com