வானளாவிய கட்டிடத்தின் மீது 60 நிமிடத்தில் ஏறி சாதனை படைத்த 60 வயதான பிரெஞ்சு ஸ்பைடர் மேன் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலியன் ராபர்ட் என்பவர் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இன்றி உயரமான கட்டிடங்களில் ஏறுவதில் புகழ் பெற்றவர். இதன் காரணமாக இவர் 'பிரெஞ்சு ஸ்பைடர் மேன்' என்று அறியப்படுகிறார்.
கடந்த மாதம் அவர் 60 வயதை எட்டியபோது தனக்கென ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 48 மாடிகளைக் கொண்ட வானளாவிய கட்டிடத்தில் பாதுகாப்பு கருவிகள் எதுவும் இன்றி ஏற வேண்டும் என்று எண்ணினார் ஆலியன் ராபர்ட்.
பாரீசில் உள்ள 48 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் சிவப்பு நிற உடையை அணிந்தபடி 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்தார் ஆலியன் ராபர்ட்.
இவர் பல முறை இந்த கட்டிடத்தில் ஏறியிருந்தாலும் இந்த முறை வெறும் 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையைப் படைத்தார்.
ஏற்கனவே ஆலியன் ராபர்ட் உலகம் முழுவதும் உள்ள பல உயரமான கட்டிடங்களில் ஏறியுள்ளார். அதிலும் குறிப்பாக துபாயின் புர்ஜ் கலீபாவின் உச்சியை அடைந்தது அவரின் சாகசங்களில் துணிச்சலான சாதனையாகும்.
அவர் வழக்கமாகத் தனது சாகசங்களுக்கு முன்அனுமதி வாங்காமல் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல் இந்த முறையும் அவர் கட்டிடத்தின் உச்சியை அடைந்ததும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust