திருட்டு குறித்த தகவல்கள் போனில் பதிவு : போலீஸில் மாட்டிக்கொண்ட திருடன் - ஓர் அடடா சம்பவம்

வெய்ன் ஆக்ஸ்டல் என்ற நபர், தான் ஈட்டுப்பட்ட திருட்டு சம்பவங்கள் குறித்து தன் நண்பர்களிடம் பெருமையடித்துக் கொண்ட தொலைப்பேசி கால்கள், அவருக்கே தெரியாமல், செல் போனில் பதிவானதால், வசமாகச் சிக்கிக்கொண்டுள்ளார். நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது
Arrest
ArrestPexels
Published on
Arrest
கென்யா : வீட்டு தோட்டத்தில் மறைந்திருந்த சிங்கம் - நடந்தது என்ன?

நகரம் திரைப்படத்தில் வடிவேலு காமெடி ஒன்று இருக்கும். “அண்ணனின் நூறாவது திருட்டு” என்று அவருடைய அல்லக்கைகள் போஸ்ட்டர் ஒட்டி வடிவேலுவை போலீஸில் சிக்க வைத்து விடும். அதுபோலவே, இங்கிலாந்தில் உள்ள ஒரு திருடன், தான் நடத்திய திருட்டுச் சம்பவங்களைப் பற்றி தற்பெருமையாகப் பதிவுசெய்து மாட்டிக் கொண்டிருக்கிறார் இப்போது.

வெய்ன் ஆக்ஸ்டல் என்ற திருடன், தான் திருடிய செக்வே ஸ்கூட்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது போலீஸிடம் அகப்பட்டான். மேலும் போலீஸார் அவனிடம் இருந்த மற்ற உடைமைகளையும் கைப்பற்றிச் சோதனையிடுகையில், ஏற்கனவே தான் செய்த சாமர்த்தியமான திருட்டுகள் குறித்து வெய்ன் அக்ஸ்ட் தன்னுடைய நண்பர்களிடத்தில் பெருமையாக பேசிய அழைப்புகளின் பதிவுகள் காவல்துறைக்குக் கிடைத்திருக்கின்றன.

Arrest
Arrest Twitter

ஒரு நீதிமன்றத்தால், சந்தேகத்திற்கு இடமில்லை என்று அக்ஸ்டல் விடுவிக்கப்பட்ட வழக்கில் கூட அவனுக்குத் தொடர்பு இருப்பது குறித்த தகவல்களும் அந்த தொலைப்பேசியில் இருந்திருக்கிறது.

பல திருட்டுகளைப் புத்திசாலித்தனமாகச் செய்த அந்த திருடன், தன்னுடைய போனில் டீஃபால்ட்டாக இருந்த செட்டிங்குகளை மாற்றாமல் விட்டதால் அவன் பேசிய அழைப்புகள் எல்லாம் தானாகவே ரெகார்ட் செய்யப்பட்டிருந்தன.

ஆக்ஸ்டலின் வழக்கறிஞர் பீட்டர் டு ஃபியூ, ஆக்ஸ்ஃபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில், தனது கட்சிக்காரருக்கு போனில் டீஃபால்ட் செட்டிங் தானாக அழைப்புகளைப் பதிவு செய்யும் என தெரியாது” என்று வாதாடியிருக்கிறார்.

Police
Police Pexels

அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலெக்ஸ் ராட்லி கூறுகையில், 2021 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டுஷையர் மற்றும் பக்கிங்ஹாம்ஷையரில் நடந்த திருட்டுகளையும் ஆக்ஸ்டல் தான் செய்திருக்கிறார் என்பதை அவர் பேசிய ரெக்கார்டுகள் உறுதி செய்திருக்கிறது” என்றார்.

அக்ஸ்டலின் போன் முக்கியமான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர் 13 திருட்டுகள் நடத்தியிருப்பதாக நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது.

Arrest
பீகார்: 60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள் - ஓர் ஆச்சர்ய திருட்டு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com