”என் கணவர் ஏமாற்றிவிட்டார்” - பொம்மையை திருமணம் செய்த பெண் பகீர் புகார்

கடந்த ஜூன் மாதம் இந்த தம்பதியின் அன்பிற்கு அடையாளமாக குழந்தை பிறந்ததாக மோரேஸ் தெரிவித்தார். இந்த குழந்தைக்கு மார்செலின்ஹோ என பெயரிட்டனர். மருத்துவர், நர்ஸ் ஆகியோரின் உதவியுடன் அவரது வீட்டிலேயே குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.
பொம்மையை திருமணம் செய்த பெண்
பொம்மையை திருமணம் செய்த பெண்instagram
Published on

சில மாதங்களுக்கு முன் பொம்மையை திருமணம் செய்து கொண்ட ப்ரேசில் நாட்டு பெண் தற்போது அவரது திருமணம் முறியும் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம் இணையவாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் என்ற 37 வயது பெண், கடந்த டிசம்பர் மாதம், அவரது அம்மாவின் வீட்டில் தயாரிக்கப்பட்ட மார்செலோ என்ற பொம்மையை (ragdoll) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் இந்த தம்பதியின் அன்பிற்கு அடையாளமாக குழந்தை பிறந்ததாக மோரேஸ் தெரிவித்தார். இந்த குழந்தைக்கு மார்செலின்ஹோ என பெயரிட்டனர். மருத்துவர், நர்ஸ் ஆகியோரின் உதவியுடன் அவரது வீட்டிலேயே குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

இந்நிலையில், மோரேஸ் தற்போது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கும் மார்செலோவுக்கும் இடையில் விரிசல் விழுந்துள்ளதாகவும், அவர்களது உறவு முறியும் நிலையில் இருப்பதாகவும் மோரேஸ் கூறியுள்ளார். மோரேஸின் கணவர் மார்செலோ வேறொரு பெண்னுடன் தனியறைக்கு சென்றதை பார்த்ததாக மோரேஸின் தோழி அவரிடம் கூறியுள்ளார்.

பொம்மையை திருமணம் செய்த பெண்
உலகிலேயே பயங்கரமான 'பேய் பொம்மை' - அருங்காட்சியத்தில் வைக்க காரணம் என்ன?

லாட்பைபில் என்ற பத்திரிக்கையின் அறிக்கைப்படி ”நான் என் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் மூன்று நாட்கள் இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்துள்ளார்” என்று மோரேஸ் கூறினார்

மேலும் முதலில் இதை தான் நம்பவில்லை எனக் கூறிய மோரேஸ், பின்னர் கணவரின் மெசேஜ்களை படித்ததாகவும், அப்போது அவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டுபிடித்தாகவும் கூறினார். இது பற்றி கேட்டபோது, அவரது கணவர் இதை மறுத்துள்ளார். மேலும், மோரேஸை மிகவும் காதலிப்பதாக கூறிய மார்செலோ, மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாகவும், மிகவும் அழுததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரது குழந்தைக்காக அவர்கள் ஒரே வீட்டில் வாழப்போவதாக கூறியுள்ளார் மோரேஸ். ஏனென்றால், இவர்களது பிரச்னைக்காக, குழந்தையை தந்தையிடமிருந்து அவர் பிரிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்

தன்னுடன் நடனமாட ஒரு நண்பன் இல்லாததால் தயாரிக்கப்பட்ட இந்த பொம்மையுடன் நாளடைவில் இவர் காதலில் விழுந்துள்ளார். இந்த திருமணத்தால், தன் கணவர் மார்செலோவின் வருகையால் அவரது வாழ்க்கை முழுமையடைந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

பொம்மையை திருமணம் செய்த பெண்
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com