சீனா: ரூ.1800 திருடிவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த நபர் - இப்போது வெளியேவர காரணமென்ன?

கடந்த 14 ஆண்டுகளாக அவர் அந்த குகையில் தான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பண்டிகைகள் முக்கிய நிகழ்வுகளின் போது மட்டும் ஊருக்குள் வருவதுண்டு. காட்டு விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டுக்கொண்டும், ஊருக்குள் வரும்போது தேவையான காய்கறிகள், மற்ற பொருட்களை சேகரித்துக்கொண்டும் இருந்துள்ளார்.
சீனா: 14 ஆண்டுகள் குகைக்குள் வாழ்ந்த மனிதர் - ஏன்? இப்போது வெளியாக காரணமென்ன?
சீனா: 14 ஆண்டுகள் குகைக்குள் வாழ்ந்த மனிதர் - ஏன்? இப்போது வெளியாக காரணமென்ன?canva

வெறும் 1800 ரூபாயை திருடிவிட்டு போலீஸில் சிக்காமல் இருக்க 14 ஆண்டுகள் குகையில் பதுங்கி வாழ்ந்திருக்கிறார் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர்.

சிறைக்கு செல்லாமல் இருக்கவேண்டும் என நினைத்து தன் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் சீனாவை சேர்ந்த லியூ என்பவர்.

லியூ மோபு என்பவரும் இன்னும் இரண்டு பேரும் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்திருக்கின்றனர். ரூ.1859ஐ திருடிய இவர்கள், ஏற்பட்ட செலவுகள் போக மீதமிருந்த பணத்தில், ஆளுக்கு 381 ரூபாயை சமமாக பிரித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில் லியூவின் நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தன்னையும் தேடி போலீஸ் வரும் என கணித்தவர், குகை ஒன்றிற்கு சென்று பதுங்கிக்கொண்டார்.

கடந்த 14 ஆண்டுகளாக அவர் அந்த குகையில் தான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பண்டிகைகள் முக்கிய நிகழ்வுகளின் போது மட்டும் ஊருக்குள் வருவதுண்டு. காட்டு விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டுக்கொண்டும், ஊருக்குள் வரும்போது தேவையான காய்கறிகள், மற்ற பொருட்களை சேகரித்துக்கொண்டும் இருந்துள்ளார்.

காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நாய்களையும் வளர்த்து வந்துள்ளார்.

சீனா: 14 ஆண்டுகள் குகைக்குள் வாழ்ந்த மனிதர் - ஏன்? இப்போது வெளியாக காரணமென்ன?
Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த ஜப்பான் வீரரின் விறு விறு கதை!

பல சமயங்களில் ஊர்மக்கள் இவரை அடையாளம் கண்டுகொண்டு போலீசாரிடம் தெரிவிப்பதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் தப்பித்திருக்கிறார். லியூ எங்கு பதுங்கியிருந்தார் என்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியுமா என தெரியவில்லை.

ஆனால் பலமுறை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசிடம் சரணடையுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டும் இவர் வெளிவரவில்லை.

இந்நிலையில், இந்த 14 ஆண்டுகளில் லியூ தன் தந்தையின் இறுதிச்சடங்கு, மகனின் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை தவறவிட்டிருக்கிறார்.

இதன் பிறகே லியூ வாழ்வில் எதனையெல்லாம் இழந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மனமுடைந்த லியூ, 14 ஆண்டு வனவாசத்தை முடித்துக்கொண்டு, கடந்த மாதம் ஊருக்கு திரும்பியிருக்கிறார். தனது குற்றத்திற்காக போலீஸிலும் சரணடைந்தார்

லியூ, “எனக்கு இப்போது வயது 50ஐ கடந்துவிட்டது. எனது மனைவியின் உடல்நலம் சரியில்லை. வெறும் 1800 ரூபாயை திருடிவிட்டு ( 156 சீன யுவான்) 14 வருடங்கள் குகையில் வாழ்ந்தேன். இதற்காக வருந்துகிறேன்” என்றார்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட லியூ, குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்பிருக்கிறது.

சீனா: 14 ஆண்டுகள் குகைக்குள் வாழ்ந்த மனிதர் - ஏன்? இப்போது வெளியாக காரணமென்ன?
”சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com