WFH : ஊழியர்களை நோட்டமிடும் நிறுவனம்; 60 லட்சம் இழப்பீடு பெற்ற ஊழியர் - நீதிமன்றம் அதிரடி!

அந்த நிறுவனம், "மனித உரிமைகள் மீது வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது" என நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படி என்ன செய்தது அந்த நிறுவனம்? எதற்காக 60 லட்சம் இழப்பீடு எனப் பார்க்கலாம்.
WFH : ஊழியர்களை நோட்டமிடும் நிறுவனம்; 60 லட்சம் இழப்பீடு பெற்ற ஊழியர் - நீதிமன்றம் அதிரடி!
WFH : ஊழியர்களை நோட்டமிடும் நிறுவனம்; 60 லட்சம் இழப்பீடு பெற்ற ஊழியர் - நீதிமன்றம் அதிரடி!Twitter
Published on

வினோதமான காரணத்துக்காக தனது ஊழியரை வேலையை விட்டு நீக்கிய அமேரிக்க ஊடகத்திடம் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு 60 லட்சம் இழப்பீடு வாங்கியுள்ளார் நார்வேவைச் சேர்ந்த ஊழியர்.

தனது சொந்த நாட்டில் இருந்தபடியே அமெரிக்க நிறுவனமான சேடுவில் (Chetu) வசித்து வேலைசெய்து வந்தார் அந்த ஊழியர். தற்போது அந்த நிறுவனம், "மனித உரிமைகள் மீது வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது" என நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படி என்ன செய்தது அந்த நிறுவனம்? எதற்காக 60 லட்சம் இழப்பீடு எனப் பார்க்கலாம்.

சேடு நிறுவனம் 9 மணி நேரம் அதன் ஊழியர்களை வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது வெப் கேமை 9 மணி நேரமும் ஆனில் வைத்திருக்க கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இது ஊழியர்களின் தனியுரிமையில் தலையிடுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கம்பியூட்டரின் ஸ்கிரீன் மற்றும் லைவ் கேமை அலுவலகத்திலிருந்து பார்க்கும் நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ளார் அந்த ஊழியர். அவர் நிறுவனம் தனது தனியுரிமையில் தலையிடுவதாக உணர்ந்திருக்கிறார். நிறுவனம் அந்த நபர் மீது பொய்யான காரணங்களைக் கூறி அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது.

WFH : ஊழியர்களை நோட்டமிடும் நிறுவனம்; 60 லட்சம் இழப்பீடு பெற்ற ஊழியர் - நீதிமன்றம் அதிரடி!
Work from Home வரலாறு இதுதான் - அட்டகாச தகவல்

நிறுவனம் அந்த ஊழியர் வேலை செய்ய மறுத்ததாகவும் நிறுவனத்துக்கு கீழ்ப்படியவில்லை எனவும் பணிநீக்கத்துக்காக காரணம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் நார்வேயின் நீதிமன்றமோ "வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை வெம் கேம் மற்றும் லைவ் ஸ்கிரீன் வழியாக கண்காணிப்பது மனித உரிமை மீறல்" எனத் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் 72,700 டாலர்கள் அதாவது 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் இது போல வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை வைத்திருக்கும் 60% நிறுவனங்கள் குறிப்பிட்ட சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி ஊழியர்களின் ஸ்கிரீன் மற்றும் வெப்கேமை நோட்டம் விடுகின்றன என டிஜிட்டல்.காம் வலைத்தளம் கூறுகிறது.

WFH : ஊழியர்களை நோட்டமிடும் நிறுவனம்; 60 லட்சம் இழப்பீடு பெற்ற ஊழியர் - நீதிமன்றம் அதிரடி!
Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com