3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?

மாற்று ஊட்டச்சத்து ஆதாரங்களை நீண்ட நாட்களாக தேடிவரும் மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கும் செய்தி, 3டி பிரிண்டிங் முறையில் விஞ்ஞானிகள் மீன் சதையை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளனர் என்பது.
3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?
3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?Twitter
Published on

மனிதர்களில் சைவம் அசைவம் என இரண்டு வகையான உணவுப் பிரியர்கள் இருக்கின்றனர். சைவம் சாப்பிடுபவர்களில் வீகன் எனக் கூறும் மக்கள் அசைவம் உண்பதைக் குற்றமாக பார்க்கின்றனர்.

இந்த பிரச்னைக்கு புதிய தீர்வைத் தருகிறது அறிவியல். பெரிய அளவில் வளர்ந்துவரும் உணவுத் தொழில்நுட்பத்துறையில் இது ஒரு மைல்கல்.

மாற்று ஊட்டச்சத்து ஆதாரங்களை நீண்ட நாட்களாக தேடிவரும் மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கும் செய்தி, 3டி பிரிண்டிங் முறையில் விஞ்ஞானிகள் மீன் சதையை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளனர் என்பது.

“மீனின் தசைப் போல மெல்லிதாக உருவாக்குவது எளிதாக இருந்ததாக” ஸ்டேக்ஹோல்டர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அரிக் கௌஃப்மேன் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலின் ஸ்டேக்ஹோல்டர் ஃபூட்ஸ் மற்றும் சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட உமாமி மீட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?
பெங்களூரு: பிரிண்ட் செய்யப்படும் அலுவலகம், வீடுகள் - புதிய டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?

அரிக் கௌஃப்மேன் இந்த இறைச்சி ஆண்டி-பயோடிக் இல்லாதது என்றும் மிகவும் சுத்தமானது என்றும் கூறியுள்ளார். இரண்டு நிறுவனங்களும் இணைந்து இதுபோன்ற தங்களது உற்பத்திப் பொருட்களை 2024ம் ஆண்டு சந்தைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். 

3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?
நார்வே: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்?

முதலில் மலேசியாவில் இந்த இறைச்சி  அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் உடனடியாக எதிர்பார்க்க முடியாது. 

ஏனென்றால் இப்போது இந்த இறைச்சியை செய்ய உயிரி-மை என்ற பொருள் தேவைப்படுகிறது. இதனை தாவரங்களில் இருந்து பிரித்து எடுக்கின்றனர். அது மிகவும் விலை உயர்ந்தது.

3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

இவற்றை ஆய்வகங்களில் உற்பத்தில் செய்வதால் கால்நடை வளர்ப்பில் இருக்கும் பாதிப்புகளைக் குறைக்கலாம். ஆனால் எளிதாக வளர்க்க முடியாததால் அதிக விலையும் இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இவற்றின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3D பிரிண்டிங் முறையில் மீன் சதையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - எப்போது சாப்பிடலாம்?
பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com