Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த இந்த நிறுவனங்களின் போட்டியில் திறமையான நபர்களை தேர்வு செய்பவரே வெற்றி பெறுவார்.
Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?
Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?Twitter

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் வியக்கவைக்கும் விதமாக வளர்ச்சியடைந்துள்ளது. 

ஓபன் ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுடன் போட்டிப்போடுவதில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது ஆப்பிள். 

ஆப்பிளின் ஏஐ தலைவரான ஜான் ஜியானன்ட்ரியா இந்த விஷயத்தில் மோசமான நிலையில் இருக்கிறார். ஏனெனில் சிரி உள்ளிட்ட ஆப்பிளின் ஏஐ தயாரிப்புகளை உருவாக்கிய குழு இப்போது எதிர் நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த இந்த நிறுவனங்களின் போட்டியில் திறமையான நபர்களை தேர்வு செய்பவரே வெற்றி பெறுவார். 

வெளியாகியிருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் முக்கிய சொத்தாக பார்க்கப்படுவது ஸ்ரீனிவாசன் வெங்கடாசாரி, ஆனந்த் சுக்லா மற்றும் ஸ்டீவ் பேக்கர் ஆகிய மூன்று இஞ்சினியர்கள் தான்.

இந்த மூவரும் ஆப்பிளின் தேடுதல் தொழில்நுட்பத்தை (Search Technology) நவீனப்படுத்துவதில் முக்கியப்பங்காற்றினர். ஆனால் கூகுளின் பெரிய மொழி மாதிரிகளில் (Large-Language Models) பணியாற்ற ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

இந்த மூவரில் இருவர் ஐஐடி நிருவனத்தில் படித்த இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுளில் இன்ஜினியரிங், AI தயாரிப்பு விரிவாக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இருக்கும் வெங்கடாச்சாரி, ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர். 

Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?

ஆனந்த் சுக்லா கூகுளில் புகழ்பெற்ற பொறியாளர், ஐஐடி கான்பூரில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர். இந்த இருவரும் முறையே கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆப்பிளில் இருந்து வெளியேறி கூகுள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

இந்த குழுவை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனிப்பட்ட முறையில் இவர்களை வரவைத்ததாகவும், ஆப்பிள் சிஇஓ டிம் கூக் இவர்களை தக்கவைக்க முயன்றதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?
AI தொழில்நுட்பம் மூலம் செய்திவாசிப்பு : புதிய முறையை அறிமுக்கப்படுத்திய குவைத் - வீடியோ

இப்போது இந்த இன்ஜினியர்கள் கூகுளின் LLM தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஏஐ மற்றும் LLM தொழில்நுட்பங்கள் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஆப்பிளால் தனது போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியுமா என்பது கேள்வியாக தான் இருக்கிறது.

Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?
எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com