AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?

வருங்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் முழுவதுமாக ஏ.ஐ மூலம் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படலாம் என்கிறது ஆய்வுகள்.
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?இந்த புகைப்படம் ஆர்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் என்று அழைக்கப்படும் ஏ.ஐ தொழில்நுட்பம் நம்முடைய வேலைகளுக்கு ஆப்பு வைக்குமா என்ற அச்சம் மக்களிடையே பரவி வருவதைப் பார்க்க முடியும்.

சேட் ஜிடிபி, பார்ட் ஏ.ஐ போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது அன்றாட வேலைகள் தானாகவே நடக்குபடி செய்ய முடியும் எனும் நிலை வரும் போது முப்பது கோடி வேலைகள் பறிபோக வய்ப்புகள் இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

கோல்ட்மேன் சாக்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "தொழிலாளர் சந்தை குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும்." எனக் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் 18% வேலைகள் கணினிமயமாகலாம் எனக் கூறியுள்ளனர். வெள்ளை காலர் பணிகளில் இருப்பவர்களின் இடத்தையே ஏ.ஐ முதலில் கைப்பற்றுமாம்.

மேலும் அந்த அறிக்கை கூறுவதாவது, "நிர்வாக வேலைகள் மற்றும் வழக்கறிஞர் வேலைகள் கடுமையாக பாதிக்கப்படலாம். உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் குறைவான பாதிப்பையே எதிர்கொள்ளும்."

இப்போது இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் வேலைகளில் கால்வாசியை பாதிக்கும். வருங்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் முழுவதுமாக ஏ.ஐ மூலம் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படலாம்.

AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?
Bard AI: ஒற்றை பதில் $100 பில்லியனை இழந்த Google - என்ன நடந்தது?

2018ம் ஆண்டு மெக்கின்சி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு, 40 கோடி மக்கள் ஏ.ஐ-யினால் வேலை இழக்கலாம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 10 ஆண்டுகளில், கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார வல்லுநர்கள் தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.

ஏ.ஐ-யினால் தொழிலாளர்களுக்காக செலவிடப்படும் தொகை பல மடங்கு குறையும். இது உற்பத்திதிறனில் அதிகப்படியான அதிகரிப்பை ஏற்படுத்து நிலையான பொருளாதார வளர்சிக்கு வழிவகுக்கும்.

AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?
2033ல் AI தொழில்நுட்பம் : ரோபோட்களை வீட்டுவேலைகள் செய்ய வைக்க முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com