கூகுள்: நேர்காணலின் போது துண்டிக்கப்பட்ட இணைப்பு- லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர் பகிர்ந்த கதை!

அழைப்பு துண்டிக்கப்பட்டதும், இணையம் மூலம் நிறுவனத்தின் இன்டெர்னல் தளத்தில் லாக் இன் செய்ய முற்பட்டபோது அவரால் உள்நுழைய முடியவில்லை. இதே பிரச்னையை சந்திப்பதாக அவரது அணியில் இருந்த மற்ற சில ஊழியர்களும் டேனிடம் தெரிவித்துள்ளனர்.
கூகுள்: நேர்காணலின் போது துண்டிக்கப்பட்ட இணைப்பு- லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர் பகிர்ந்த கதை!
கூகுள்: நேர்காணலின் போது துண்டிக்கப்பட்ட இணைப்பு- லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர் பகிர்ந்த கதை!canva
Published on

நிறுவனத்திற்கு புதிய ஊழியரை தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கும்போது தனது வேலை பறிபோனதாக தெரிவித்திருக்கிறார் கூகுளின் பணியாளர் ஒருவர்.

கடந்த வாரம் சுமார் 12,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தது கூகுள் நிறுவனம். இது பெருவாரியாக அமெரிக்க நிறுவனத்தில் நடந்தது

இந்த பணி நீக்கத்திற்கு கூகுள் சி இ ஓ தானே பொறுப்பேற்பதாக கூறியிருந்தார், மேலும் உலகம் முழுவதிலும் இந்த லே ஆஃப் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது கதையை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதிகாலை மூன்று மணிக்கு தன் வேலை போனதாக 16.5 ஆண்டுகளாக கூகுளில் பணியாற்றிய மேலாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

அதே போல, நிறுவனத்திற்காக புதிய ஊழியரை தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கும்போது தனது வேலை பறிபோனதாக தெரிவித்திருக்கிறார் மற்றோரு ஊழியர்.

டேன் லானிகன் ரயன் என்பவர் கூகுள் நிறுவனத்தின் எச் ஆர் துறையில் பணியாற்றிவந்தார். பிசினஸ் இன்சைடரிடம் அவர் தெரிவித்ததாவது,

"நான் தொலைப்பேசியில் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கும்போது திடீரென எனது இணைப்பு துண்டிக்கப்பட்டது" என்றார்

கூகுள்: நேர்காணலின் போது துண்டிக்கப்பட்ட இணைப்பு- லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர் பகிர்ந்த கதை!
Google: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்? CEO சுந்தர் பிச்சை விளக்கம்
Google
Google NewsSense

அழைப்பு துண்டிக்கப்பட்டதும், இணையம் மூலம் நிறுவனத்தின் இன்டெர்னல் தளத்தில் லாக் இன் செய்ய முற்பட்டபோது அவரால் உள்நுழைய முடியவில்லை. இதே பிரச்னையை சந்திப்பதாக அவரது அணியில் இருந்த மற்ற சில ஊழியர்களும் டேனிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக மின்னஞ்சல் வரும்வரை இதனை தொழில்நுட்ப கோளாராக இருக்கும் என்று முதலில் நினைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

நிறுவனத்தில் தன்னுடைய ஆக்சஸ் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, மின்னஞ்சலும் தடையானது என்று கூறிய டேன், சில நிமிடங்களில் சுமார் 12,000 பேரை நிறுவனம் லே ஆஃப் செய்ததை அறிந்ததாக கூறினார்.

Sundar Pichai
Sundar PichaiTwitter

டேன்னிற்கு கூகுளில் பணியாற்றுவது நெடுங்கால கனவு. கடந்த ஆண்டு தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றுக்கொண்டிருக்கும்போது, கூகுளில் அவருக்கு வேலைக் கிடைத்த நற்செய்தி கிடைத்தது. ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார் டேன்.

"எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருந்தது. எனது பதவி உயர்வும், ஊதிய உயர்வு குறித்தும் கடந்த வாரம் தான் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இப்படி எதிர்பாராத விதமாக வேலையிலிருந்து நீக்கப்படுவேன் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை." என்றிருந்தார்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என சி இ ஓ சுந்தர் பிச்சை உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

கூகுள்: நேர்காணலின் போது துண்டிக்கப்பட்ட இணைப்பு- லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர் பகிர்ந்த கதை!
Meta: வேலைக்காக இந்தியாவில் இருந்து கனடா சென்ற நபர் - இரண்டே நாளில் லே ஆஃப் செய்த நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com