ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்

அதிபரின் கட்டுப்பாட்டை அமைதியாக மறுத்த அமன்பூர், நாம் நியூயார்கில் தான் இருக்கிறோம். இங்கு தலையில் துப்பட்டா அணிய எந்த சட்டமும் பாரம்பரியமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்Twitter
Published on

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் போராடிவரும் நிலையில் ஹிஜாப் அணியாத பெண் பத்திரிக்கையாளருக்கு பேட்டிக் கொடுக்க மறுத்துள்ளார் அதிபர் இப்ராஹிம் ரைசி.

UNGA முன்னிட்டு அமெரிக்கா வருகைத் தந்த ஈரான் அதிபரை நேர்காணல் செய்யத் திட்டமிட்டுள்ளார் சி.என்.என்னின் அனுபவமிக்க பத்திரிக்கையாளரான கிறிஸ்டியன் அமன்பூர்.

ஈரானில் மாசா அமினி என்ற பெண் morality police-ஆல் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தங்களது ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 8க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இறந்திருக்கலாம் என மனித உரிமைகள் ஆணயம் கூறியுள்ளது.

ஈரானில் நிலவிவரும் பிரச்னைகளால் இந்த நேர்காணல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஈரான் அதிபர் இதில் கலந்துகொள்ளவில்லை.

நேர்காணல் தொடங்கப்பட வேண்டிய நேரத்திலிருந்து 40 நிமிடங்கள் கழித்து, மொஹரம் மற்றும் safar புனித மாதத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர் தலையில் முடியை மறைக்கும் படி, துப்பட்டா அணிய வேண்டும் என அதிபரின் உதவியாளர் கூறியுள்ளார்.

ஆனால் அதனை அமைதியாக மறுத்த அமன்பூர், நாம் நியூயார்கில் தான் இருக்கிறோம். இங்கு தலையில் துப்பட்டா அணிய எந்த சட்டமும் பாரம்பரியமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

Ebrahim Raisi
Ebrahim Raisi

மேலும், தான் இதற்கு முன்னர் மற்ற ஈரானிய அதிபர்களை ஈரானுக்கு வெளியே நேர்காணல் செய்திருப்பதாகவும், அப்போது தலையில் துப்பட்டா அணிந்ததில்லை எனவும் எடுத்துக் கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் அமெரிக்காவில் நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டது இதுவே முதன்முறை.

ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்
ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

பத்திரிக்கையாளர் விளக்கம் கூறிய பின்னரும் அதிபரின் உதவியாளர் மரியாதை நிமித்தமாகவும், ஈரானில் நிலவும் பிரச்னைக் காரணமாகவும் பத்திரிக்கையாளரை தலையில் துப்பட்டா அணிய வற்புறுத்தினார்.

ஆனால் வழக்கமில்லாத ஒரு கட்டுப்பாட்டை எதிர்பாராத விதமாக கூறினால் தன்னால் ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார் அமன்பூர். இதனால் நேர்காணல் நடக்கவில்லை.

இதனை தனது ட்விட்டரில் பர்ந்துள்ளார் அமன்பூர்.

பத்திரிக்கையாளர் அமன்பூர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இங்கிலாந்தை சேர்ந்த இவரின் தந்தை ஒரு ஈரானியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்
ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com