10 நிமிடம் லேட்! 335 பேரோடு பறந்து வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய விமான நிலையம் - ஏன்?

டோக்கியோ விமானம், 10 நிமிடங்கள் தாமதமாக ஃபகோகா விமான நிலையத்தை அடைந்துள்ளது. இதனால், அங்கிருந்த அதிகாரிகள் விமானத்தை தரையிறக்கவிடவில்லை, திருப்பி அனுப்பியுள்ளனர்.
10 நிமிடம் லேட்! 335 பேரோடு பறந்து வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய விமான நிலையம் - ஏன்?
10 நிமிடம் லேட்! 335 பேரோடு பறந்து வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய விமான நிலையம் - ஏன்?ட்விட்டர்
Published on

தரையிறங்க 10 நிமிடம் தாமதம் ஆனதால், விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது.

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி JL 331 விமானம் ஒன்று ஃபகோகா நகருக்கு புறப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு புறப்பட்டது. மோசமான வானிலை மற்றும், கடைசி நிமிடத்தில் விமானத்தை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதனால், இந்த தாமதம் ஆகியுள்ளது

டோக்கியோவிலிருந்து ஃபகோகாவுக்கு கிட்ட தட்ட 550 கிலோமீட்டர் தூரம். ஃபகோகா நகரில் இரவு பத்து மணியோடு விமானங்கள் தரையிறங்குவது நிறுத்தப்படும் என அறியப்படுகிறது.

டோக்கியோ விமானம், 10 நிமிடங்கள் தாமதமாக ஃபகோகா விமான நிலையத்தை அடைந்துள்ளது. இதனால், அங்கிருந்த அதிகாரிகள் விமானத்தை தரையிறக்கவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

அருகில் உள்ள விமான நிலையம் ஏதேனும் ஒன்றில் தரையிறக்கலாம் என முயற்சித்து அது முடியாமல் போனது.

இதனால் மீண்டும் 5 மணி நேரம் பயணித்து புறப்பட்ட இடத்துக்கே வந்தடைந்திருக்கிறது விமானம்

10 நிமிடம் லேட்! 335 பேரோடு பறந்து வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய விமான நிலையம் - ஏன்?
பெண் பயணி புகாரால் 6 மணி நேரம் தாமதமான இண்டிகோ விமானம் - விசாரணையில் வெளியான உண்மை என்ன?

டோக்கியோவுக்கு திரும்பும் வழியில், கன்சாய் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பி மீண்டும் பயணம் தொடர்ந்தது.

பிப்ரவரி 20 ஆம் தேதி அதிகாலை 2.50 மணிக்கு டோக்கியோ வந்தடைந்தது விமானம். விடிந்ததும், ஃபகோகா விமான நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளை செய்து பயணிகளை ஃபகோகாவுக்கு அனுப்பிவைத்தது.

ஃபகோகா விமான நிலையத்தின் மிக அருகிலேயே பொதுமக்கள் வாழ்வதால், இரவு பத்து மணியோடு அங்கு விமானங்கள் தரையிறங்குவதில்லை. இது தவிர்க்க முடியாத நடவடிக்கை எனக் கூறியுள்ளது ஜப்பானிய விமான நிறுவனம்

10 நிமிடம் லேட்! 335 பேரோடு பறந்து வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய விமான நிலையம் - ஏன்?
துருக்கி : உதவ சென்ற இந்திய விமானம் - பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதி மறுக்கப்பட்டதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com